தமிழகத்தில் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் துவங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, […]

நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி […]

லோக்தந்திரிக் ஜனதா தளம் அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார் மனைவி உஷா காலமானார். அவருக்கு வயது 82. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.பி வீரேந்திர குமாரின் மனைவியாவார். பெல்காமைச் சேர்ந்த பாபுராவ் குண்டப்பா லெங்கடே மற்றும் பிரமிளா ஆகியோருக்குப் பிறந்த உஷா, 1958 ஆம் ஆண்டு வீரேந்திர குமாரை தனக்கு 18 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். அன்று முதல், […]

“ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் மற்றும் ரவீனா ரவி நடித்த “ஒரு கிடயின் கருணை மனு” என்னும் திரைப்படம் திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ரகுராம் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் வரவிருக்கும் திரைப்படமான சத்திய சொதனை […]

தென் கொரியா தலைநகர் சியோலில் ஹாலோவீன் பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் நசுக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர். இது குறித்து சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் சியோங்-பியோமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும், சனிக்கிழமை இரவு இட்டாவோனின் சியோலில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலைத் […]

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. […]

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்; தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த […]

கிராம சபை கூட்டங்கள் போல, தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில், நகராட்சிகளின் 2022-23-ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

மக்கள் குறைதீர்ப்புக்காக சிறப்பு இயக்கம் 2.0-ஐ தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், தொழிலாளர் நலத்துறை சென்னை அலுவலகம் நடத்துகிறது. பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், மத்திய அமைச்சகத்தின் வலைதளமான https://labour.gov.in/ -ல் தங்களின் தகவல்களை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பீடி, சுண்ணாம்பு, கனிம சுரங்கம் மற்றும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள், நிர்வாகம், மருத்துவமனை பராமரிப்பு, மருந்துகள் வழங்கல், நலத் […]