பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்; துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க […]

அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையான […]

அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு சுழலி மின் நிலையங்கள் போன்ற எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாகவும், சூரிய சக்தி, காற்றாலை போன்ற மரபுசாரா ஆற்றல் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்து […]

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 10 முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் அரசியல் ரீதியாக முக்கிய திருப்புமுனை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் வியூகங்களை தீவிரமாக வடிவமைத்து வருகிறது. அதிமுகவின் மீண்டும் ஆட்சிக்கு வருகை தடுப்பதே இந்த புதிய வியூகத்தின் முக்கிய […]

தமிழக பாஜகவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பாஜகவில் கூட்டணிக்கு எதிராக […]

வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் […]

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த […]

திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார் ‌. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சின்னாளப்பட்டி […]

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை உடனுக்குடன் கண்டறியும் வகையில் இணைய வழியில் உள் தணிக்கை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பதிவுத்துறையால் ஆவணப்பதிவு உள்ளிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மூலம் இணைய வழி பயன்பாட்டிற்கு கொண்டு வர STAR 2.0 Module. 13.02.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. […]

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; வரும் தேர்தலில் கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். அதனை உறுதி செய்துள்ளது இங்கு கூடியுள்ள கூட்டம். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெறும். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர், ஓட்டு வாங்கும்போது உங்களை அணுகினார். ராஜினாமா செய்ய உங்களை சந்தித்தாரா…? கடந்த 26, 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இங்கு […]