தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவைக்கு கொண்டு வர திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன் பிறகு வரும் இடைத்தேர்தலில் மு,க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அரவிந்த் ஆகாஷ் 50 வயதை நெருங்கிய நிலையில், தனது திருமணத்தை கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.திருமணத்தை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக செய்து கொண்டார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகின்றது. பஞ்சாபைச் சேர்ந்த அரவிந்த் ஆகாஷ், நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய […]
பெண் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக்கட்டமாக அமைவது முதல் மாதவிடாய். இது ஒரு இயல்பான உடல் வளர்ச்சி நிகழ்வு மட்டுமல்ல; உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த கட்டத்தில் குழந்தைகள் குழப்பம் அல்லது பயம் உணர வாய்ப்பு உள்ளது. அதனால், பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். மாதவிடாய் திடீரென வருவதில்லை, பொதுவாக 10–15 வயதுக்குள் தொடங்கும். சராசரி […]
கோலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் , ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்லுவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகள் அனைத்திலும் சோதனை நடைபெறும். பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு அல்லது கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA)2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.தற்போது அது ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக “VB G RAM G” என்ற புதிய சட்டம் இன்று(ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 100 நாள் வேலை திட்டம்(MGNREGA) கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]
2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி: கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைதளங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து […]
காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுவது 4வது நாளான நேற்று நடந்தது. முதல் நாளில் 1300 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 2ம் நாள் 64 பேரும், மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே அளிக்கப்பட்டிருந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்பில் […]
வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை, பி.எச்.டி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய படிப்புகளை மேற்கொள்ள, ‘தேசிய வெளிநாட்டு உதவித்தொகை’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மக்களவையில் தெரிவித்தார். ஆண்டுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள் 20 பேருக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்ச […]

