தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ […]

முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கம்‌ மாநிலத்தில் பொதுக்க கூட்டத்தில்‌ பங்கேற்றுவிட்டு திரும்புகையில்‌ சிலிகுரியில்‌, மோசமான வானிலையால்‌ ஹெலிகாப்டர்‌ அவசரமாக தரையிறக்கவே முதல்வர்‌ மம்தாவுக்கு காயம்‌ ஏற்பட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். MRI ஸ்கேன்‌ செய்ததில்‌ அவரின்‌ இடது முழங்கால்‌, இடுப்பு பகுதியில்‌ காயம்‌ ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

பக்ரித் பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது ‌ இது குறித்து விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்ட அறிக்கையில்‌, பக்ரீத் முன்னிட்டு இன்று சென்னையில்‌ இருந்தும்‌ மற்றும்‌ பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழ்நாடுமுழுவதும்‌ பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மூலம்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Quality Engineer – Supplier Quality Assurance பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Engineering கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 வருடம் வரை அனுபவம் […]

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும், செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக […]

மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் முன்முயற்சிகள் காரணமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன்  இவற்றை வாங்குவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதனால் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனச் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் அதிவேக மின்சார வாகனப்பயன்பாட்டுக்கு நாடு முன்னேறிச் செல்லும் என்பதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை சுமார் ஒரு ஜிகா டன் அளவுக்கு […]

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]

தமிழகத்தில் 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 30-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. […]

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அனுமதி பெறாமல்‌ வைக்கப்படும்‌ விளம்பர பலகைகள்‌/பதாகைகள்‌ மற்றும்‌ விளம்பர தட்டிகள்‌ / அட்டைகள்‌ அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின்‌ ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்‌ நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்‌ விளம்பர பலகைகள்‌/பதாகைகள்‌ அனுமதி பெறாமல்‌ நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது,தொடர்பாக பின்வரும்‌ முடிவுகள்‌ எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி பகுதிகளில்‌ விளம்பர பதாகைகள்‌ நிறுவ தமிழ்நாடு […]