அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மைக்கழகம் தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.இந்த 21 மாதகால பகுதி நேர படிப்பில் சேரும் பணிபுரிவோர் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் […]

நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு […]

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான புதிய உதவி எண்ணை அறிவித்துள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடிமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்கும், ஆதரவு சேவைகளை அணுகுவதற்கும் ஏதுவாக, போஷான் மற்றும் பிரதமரின் மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கான கட்டணமில்லா உதவி எண்ணில் மாற்றத்தை அறிவித்துள்ளது. தற்போதுள்ள 14408 என்ற எண்ணுக்கு பதிலாக புதிய உதவி எண் 1515, […]

தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் பற்றிய தகவலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வெளிப்படை தன்மையை உருவாக்க இது பற்றிய விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் காட்சிப்படுத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் கள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த பாஸ்களுக்கான கட்டணம் மற்றும் நடைமுறைகளில் சாலை பயன்பாட்டாளர்கள் […]

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். […]

இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூரில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், […]

விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் […]

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக 28-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாகியுள்ளது. இது மேற்கு,வடமேற்கு திசையில் மெதுவாகநகர்ந்து, இன்று […]

சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத தகவல்களை நீக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பாதுகாப்பு, பொறுப்புணர்வு, வெளிப்படை தன்மையை உறுதிசெய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ல் உரிய திருத்தங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திருத்த சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இச்சட்ட பிரிவு 3(1)(டி)-யின் படி நீதிமன்ற […]