முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு […]
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க இருக்கிறார். […]
சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு குறைவானதால் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் […]
தமிழக அரசால் நரிக்குறவர், குருவிக்கான் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழங்குடியினர் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள் / சார் ஆட்சியர்கள், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்குவதற்கு எதுவாகவழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளநரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் […]
இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 8-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் வரும் 28 ம் தேதி விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல், 11-ம் தேதி வரை தனித்தேர்வர்களுக்கு, பொதுத்தேர்வு நடைபெறும். இத்தேர்வில் ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று, 12.5 வயது பூர்த்தி அடைந்தவர் பங்கேற்கலாம். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும், […]
பெங்களூரு-தார்வாட் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில், இந்தியா முழுவதும் 400 அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டத்தை வகுத்தது, இந்த பயணத்தில், இந்திய ரயில்வே தென்னிந்தியாவின் புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியது. கேஎஸ்ஆர் பெங்களூரு மற்றும் தார்வாட் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். செங்கல்பட்டு,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் ஜுன் […]
பல்கலைக்கழகம்,மருத்துவம் , பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ / பள்ளி படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு 30.06.2023- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்போட்டிகள் வருகின்ற ஜுலை-2023-ல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, உலகத் திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் […]
South Indian வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Lead, Senior Data Scientist, Scientist, Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 4 முதல் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு […]