இந்தியாவில் இருந்து ரூ.88,032 கோடியை காணவில்லை என ஏற்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 88,032 கோடி மதிப்பிலான 500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டதாகவும். ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்ட நிலையில், 1,760.65 மில்லியன் நோட்டுகள் […]

ஜூன் 22, 24 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ‌. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் […]

தமிழகத்தில் இன்று வேலூர் உட்பட 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைபெய்யும்‌. விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, தர்மபுரி, வேலூர்‌, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, சேலம்‌, நாமக்கல்‌,கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]

எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், தனது முன்னாள் பணிப்பெண்ணின் மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலி பழங்கால வியாபாரி மோன்சன் மாவுங்கலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கே சோமன் உத்தரவிட்டார். கேரளமாநிலம்‌ எர்ணாகுளம்‌ மாவட்டத்தை சேர்ந்தவர்‌ வியாபாரி மோன்சன்‌மாவுங்கல்‌. இவரது வீட்டில்‌ பணி […]

மழைக்காலம் குறித்த கவலையளிக்கும் வகையில், கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, இந்த மாதத்தில் மட்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் ஏற்படும் நோய் பருவமழையின் போது எளிதில் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், மழைப்பொழிவு அதிகரிப்பால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது…? டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 4 நெருங்கிய […]

சாலைப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு இலக்காகும் இடங்களை கண்டறிந்து, குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்தி அவற்றைக் குறைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர்களுக்கு, விபத்துக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் விபத்து நடக்காமல் தடுக்கும்வகையில் தலா ரூ.10 லட்சம் செலவில் நடவடிக்கைகளை எடுக்க இந்த இயக்குநர்கள் […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் House Faculty பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 8 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.22,500 […]

2023-24 (தொடர்- I) தங்கப் பத்திரங்களுக்கான மத்திய அரசின் அறிவிக்கை 2023, ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்த முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு […]

இந்தியாவில் 2023 ஜூன் 13 தேதி நிலவரப்படி ஒட்டு மொத்த நிலக்கரி இருப்பு 110.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பான 76.67 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில், 44.22% என்னும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு அதிகரித்துள்ளதால் விநியோகத்தை தடையின்றி பராமரிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதே போல 13.06.2023 நிலவரப்படி 2023-24 நிதியாண்டில், மின்சாரத் துறைக்கு நிலக்கரி அனுப்பும் விசயத்தில் 164.84 […]

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக ஆளுநர், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் […]