மகளிருக்கான உரிமைத்தொகை பெற 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். வேலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில். மாவட்டத்தில்‌ மொத்தமுள்ள 699 நியாய விலைக்‌ கடைகளில்‌ மொத்தம்‌ 4,53,934 குடும்ப அட்டைகள்‌ உள்ளன. இதில்‌, முதற்கட்டமாக 418 நியாய விலைக்‌ கடைகளுக்கு உட்பட்ட3,02,955 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ ஜூலை 24 முதல்‌ ஆகஸ்ட்‌ 4-ம்‌ தேதி வரையும்‌, இரண்டாம்‌ கட்டமாக 281 நியாய விலைக்‌ கடைகளுக்கு உட்பட்ட 1,50,987 […]

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் ஆடி அமாவாசை பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் சேதுக்கரை, தேவிப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பார்கள். இதனைத் தொடர்ந்து, போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் காரணமாக மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 முதல் 10 வருடம் வரை […]

யமுனை ஆற்றின் நீர்மட்டம் மெதுவாகக் குறைந்து வருவதால், தேசிய தலைநகரில் தண்ணீர் தேங்கும் நிலை மேம்பட்டு வருகிறது. இதனால் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை […]

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். 8-வது சர்வதேச அபாகஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், நெய்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், தங்களது அற்புதமான திறனால், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சர்வதேச அரங்கில் மிகச் சிறிய வயதிலேயே சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற அம்மாணவர்களை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு.பிரசன்ன […]

தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி ஆக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக வளர்ச்சி போதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மக்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு […]

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார். மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால்‌ மழை பற்றாக் குறையால்‌, கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர்‌ பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான ‌தண்ணீர்‌ இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில்‌ தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் […]

முன்னாள் பிரபல இந்திய சர்வதேச கால்பந்து வீரர் பிரபாகர் மிஸ்ரா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. 1970 களில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மிஸ்ரா, 1976 இல் டாக்காவில் நடந்த ஆகா கான் தங்கக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடினார் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒரு கோல் அடித்த பெருமையைப் பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் காலமானதாக அவரது உறவினர்கள் […]

சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாடு முன்னாள்‌ முதல்வர்‌ டாக்டர்‌. கலைஞர்‌ அவர்களால்‌ பதிவுத்துறையில்‌ முன்னோடித்‌ திட்டமாக 06.02.2000 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்‌’ திட்டம்‌ தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள்‌ அடைந்து கணினிமயமாக்கலில்‌ பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத்‌ திகழ வைத்துள்ளது. பதிவுத்துறையில்‌ வழங்கப்பட்டு வரும்‌ அனைத்து சேவைகளும்‌ இணையதள அமைப்பிலான “ஸ்டார்‌ […]