இத்தாலியின் முன்னாள் பிரதமர் 86 வயதில் காலமானார். சில்வியோ பெர்லுஸ்கோனி, முன்னாள் இத்தாலிய பிரதமர் தனது 86வது வயதில் காலமானார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஊடகத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெர்லுஸ்கோனி, கடந்த சில காலமாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் 1994 மற்றும் 2011 க்கு இடையில் மூன்று இத்தாலிய அரசாங்கங்களை வழிநடத்தினார். அவரது கட்சி – […]
பிரபல நடிகர் கசான் கான் உடல்நலக்குறைவால் காலமானார். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தனது தாக்கமான வில்லன் நடிப்பிற்காக அறியப்பட்ட பிரபல நடிகர் கசான் கான் காலமானார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், மாரடைப்பால் உயிரிழந்தார். திலீப் நடித்த ‘சிஐடி மூசா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததற்காக கசான் கான் பாராட்டுகளைப் பெற்றார். 1993 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘கந்தர்வம்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார். கசான் கான் […]
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது […]
SBI வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager – Process & Functional Audit பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக […]
அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் […]
நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள குறியீடுகளை வைத்து அவை எங்கு அச்சிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள நாணயங்கள் நான்கு அச்சகங்கள் அச்சிடுகின்றன. அதன் படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியிலும், மகாராஷ்டிராவில் நாசிக், கர்நாடகாவில் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் சல்போனி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தேவாஸ் மற்றும் நாசிக் அச்சகங்கள் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு சொந்தமானது, இது […]
பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது வன்ஷிகா சோப்ரா என்னும் இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவின் பிலிம் சிட்டி பகுதியில் நேற்று பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இரும்புத் தூண்கள் சரிந்து வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபி ராஜ் ஆகியோர் மீது விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் […]
எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நிதின் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார் கேரள கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான நிதின் அகர்வால், எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில் மத்திய அரசு அவரை நியமனம் செய்துள்ளது. தற்போது டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தலைமையகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணிபுரியும் […]
12-ம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 14-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வரும் ஜூன் 14-ம் தேதி மதியம் முதல் www dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், […]
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,” சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும்உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசிவிலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவேமுதல் முறையாகும். அதேபோல், கடந்த வாரம் ரூ.118 ஆகஇருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலைஇப்போது […]