தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 16-ம் தேதி வரை […]

தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 -ன் படி […]

நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கும் விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் […]

பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது […]

செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது போலியோ நோயைத் தடுப்பதற்கான ஒரு தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் […]

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]

பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]

வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு […]

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]