10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு இன்று மாலை வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். […]
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைஅஞ்சல் துறையுடன் இணைந்து, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும்பிரசாதங்களை அஞ்சல் மூலம் மக்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 48 கோவில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது “திருக்கோயில்” மொபைல் செயலி மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதில் பக்தர்கள் தங்களுக்கு எந்த கோவிலின் பிரசாதம் தேவை, முகவரி, தேவையான அளவு மற்றும் […]
சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும், பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுச்சட்டம், 2013, பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது என சட்டம் உள்ளது. இதனை மீறுவோர் மீது பிரிவு 9-ன் படி தண்டனை மற்றும் அபராதம் […]
பழம்பெரும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (60) தொழிலதிபர் ரூபாலி பருவாவை வியாழக்கிழமை கொல்கத்தா கிளப்பில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர்களது முதல் சந்திப்பைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, இது ஒரு நீண்ட கதை என்றும், அதை வேறு நேரத்தில் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறினார். மறுபுறம் திருமணம் குறித்து ரூபாலி, கூறுகையில் “நாங்கள் சில காலத்திற்கு முன்பு […]
நீலகிரி மாவட்டத்தில் ‘புதியன விரும்பு- 2023’ என்ற தலைப்பில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் மாணவர்களுக்கான, 5 நாள் பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு, 80,000 மாணவ, மாணவியர் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர். மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு […]
குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தை குட்டிகள் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் “வெப்பம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக வியாழன் அன்று இறந்ததாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 24 அன்று நமீபிய சிறுத்தைக்கு பிறந்த குட்டிகள், தாய் மற்றும் குட்டிகள் வசிக்கும் வேலி பகுதியில் வெளிப்படையான நீரிழப்பு மற்றும் உடல் […]
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து தருதல் வேண்டும். இருக்கைகள், கணினி தொடர்பான சாதனங்கள் இவர்களுக்கு பெற்றுத் தருதல் வேண்டும். இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முன்பருவக் கல்வி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலுள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு […]
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பகுஜன் சமாஜ் கட்சி என் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2023-ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல் 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரி www.tneaonline.org ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் […]
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு நாளை மாலை வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். […]