கேரளாவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஒன்று மூழ்கிய சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மாநில அமைச்சர் வி.அப்துரஹிமான், தனுர் பகுதியில் உள்ள துவால்த்திரம் கடற்கரை அருகே படகு கவிழ்ந்து மூழ்கியதில் 20 […]

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் இன்று பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் மேளாவை நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடத்துகிறது. உள்ளூர் இளைஞர்களுக்கு பொருத்தமான தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த மேளாவில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல […]

இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்க உள்ளது. SC / ST மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணரக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் ( Admission […]

சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன்‌ காரணமாக அப்பகுதிகளில்‌ இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்‌கூடும்‌.இது நாளை […]

அங்கன்வாடி பணிகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌, இயக்குநர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில், குழந்தைகள்‌ மையங்கள்‌ வழக்கமாக செயல்படும்‌ நாட்களில்‌ முன்பருவக்‌ கல்வி மூலம்‌ பயன்பெறும்‌ 2 வயது முதல்‌ 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச்‌ சட்டம்‌ 2013-ல்‌வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும்‌ 12 கிராம்‌ புரதச்சத்தினை ஆண்டில்‌ […]

12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ இன்று காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌. தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு SMS மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, […]

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Territory Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 7 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் […]

அமெரிக்க: டல்லாஸுக்கு வடக்கே உள்ள ஷாப்பிங் மாலில் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர் கண்மூடித்தனமாக சுட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெக்சாஸின் ஆலனில் உள்ள பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அந்த நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றதாக நகர காவல்துறைத் தலைவர் பிரையன் ஹார்வி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆலன் தீயணைப்புத் […]

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 03.05.2023 அன்று 6e-1172 என்ற விமானத்தில் கொழும்பிலிருந்து வந்த இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்த இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். ஒவ்வொரு பயணியின் உடலிலும் அரிசி வடிவில் தங்கம் அடங்கிய இரண்டு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 524 கிராம் மற்றும் 518 கிராம் எடையுள்ள 55.36 […]

மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் இன்று நீட் தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் மணிப்பூர் […]