கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ப்பூரில் செய்தி அவர்களிடம் பேசிய அவர்; தென் மாநிலத்தில் மதத்தின் அடிப்படையில் மோடி வாக்கு சேகரித்து வருவதாக குற்றச்சாட்டினார். தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறி மதத்தின் அடிப்படையில் மோடி வாக்கு கேட்டு வருகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தின் […]

ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) […]

12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ நாளை காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌. தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு SMS மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, அனைத்து நூலகங்களிலும்‌ கட்டணம்‌ இன்றி […]

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெற உள்ளது. வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த 345 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர்‌ முன்னுரிமை பட்டியல்‌ வெளியிடப்பட்டது. வட்டாரக்‌ கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு EMIS இணையதளம்‌ மூலம்‌. அந்தந்த மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தில் (தொடக்க கல்வி) 10.05.2023 அன்று காலை 10:00 மணியளவில்‌ நடைபெறும்‌. இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கல்வி […]

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விஐடி பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் மே 11-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலூர் விஐடி பல்கலைக்கழகத் தில் நடத்த உள்ளன. முகாமை […]

இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நாளை முதல் தொடங்கும். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணரக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் ( Admission Facilitation Centre AFC ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Assistant Loco Pilots பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 238 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள […]

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதன்மைத் தேர்வுக்கான தேர்வுகட்டணம் ரூ.200-ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய […]

தென்கிழக்கு வங்கக்கடல்‌பகுதிகளில்‌ நாளை உருவாகும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, 8-ம்‌ தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில்‌ நகர்ந்து மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ புயலாக வலுப்பெறக்கூடும்‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு வங்க கடல்‌பகுதிகளில்‌ நாளை உருவாகும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்‌பகுதியாக மாறி, அதன்‌ பின்‌ 8-ம்‌ தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

இந்தியாவில்‌ தற்போது உற்பத்தி பொருட்கள்‌ / சேவைகளை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி மூலமாக தொழில்கள்‌ விரிவடைவதற்கான வாய்ப்புகள்‌ அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும்‌ அதன்‌ வழிமுறைகளை பற்றியும்‌ தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்‌, சட்டதிட்டங்ககளையும்‌ குறித்த இணையவழி கருத்தரங்கம்‌ பயிற்சியினை வரும்‌ 09.05.2023 தேதி முதல்‌ 10.05.2023-ம்‌ தேதி வரை […]