மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]

இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்று பதவிக் காலங்களாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 4,078 நாட்கள் நிறைவடைகிறது. அதனடிப்படையில் இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964 முதல் […]

ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இதய நோய், நீரிழிவு நோய், டிமென்ஷியா அல்லது மனச்சோர்வு காரணமாக ஏற்படும் ஆரம்பகால மரண அபாயத்தைக் குறைக்கும் என்று ஒரு புதிய உலகளாவிய ஆய்வு காட்டுகிறது. பல ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய புதிய ஆய்வு, இதய நோய் […]

நம் அன்றாட வேலைகளில் தினசரி முக்கியமான ஒன்றில் பல் துலக்குதலும் முக்கியமானதாகும். நம் காலை கடமைகளில் ஒன்றான இதை நாம் அவசர அவசரமாக செய்வதால் சிலவற்றை கவனித்திருக்கமாட்டோம். முன்பெல்லாம் பல் துலக்குவதற்கு வேப்பிலை குச்சியை பயன்படுத்தினார்கள். பின்பு பல்பொடி பயன்படுத்தினார்கள். தற்போது நவீனமயமானதையடுத்து பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலையில் வேகவேகமாக பல் துலக்கிவிட்டு சென்றுவிடுவோம். எத்தனை பேர் பேஸ்டில் கீழ் பகுதியில் இருக்கும் நிறத்தை கவனித்தார்கள் என்று தெரியாது. […]

ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலம் வந்தவுடன், கொசுக்களின் அச்சுறுத்தல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தேசிய தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. உலக அளவில் சிக்குன்குனியாவின் அச்சுறுத்தல் தற்போது அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகெங்கிலும் சுமார் ஐந்து பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். […]

செஞ்சியில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளரை கண்டித்து கட்சி நிர்வாகிகள் திடீரென விஜய் படத்தை தூக்கி எறிந்து காலால் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாட்டை […]

புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 50 கோடி குடிமக்களை செயலில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (ஜூலை 25) புதிய தேசிய கூட்டுறவு கொள்கை 2025 ஐ வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் 48 உறுப்பினர்களுடன் அனைத்து பங்குதாரர்களுடனும் பேசி இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் […]

இந்தியாவில் விமானப் பயணங்களில்போது ஏற்படும் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் குறைந்தபாடில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (ஜூலை 2025) நாட்டின் பல்வேறு விமான நிறுவனங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக DGCA-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஏர் இந்தியா […]

நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அதிலும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அப்படியென்றால் கவனமாக இருக்கவேண்டும். இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றை முன்வைத்துள்ளது. வாரத்திற்கு நான்கு முறை அல்லது அதற்கு மேல் கோழி சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பை புற்றுநோய்) அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆய்வு ‘ நியூட்ரியண்ட்ஸ் ‘ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது . இதில் 4000 க்கும் […]

9 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்கினால் மரணம் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூங்குவது என்பது சாதாரண செயல் போல தோன்றினாலும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைக்கு இளைஞர்கள் இரவு வெகு நேரம் கழித்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. குழந்தைகள் […]