காசாவில் உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இதுவரை காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால், காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் மட்டுமல்ல, உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் ஏராளமான மக்கள் […]
2020 ஆம் ஆண்டளவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகில் வேகமாக வளர்ந்து வரும் மத மக்கள்தொகையாக மாறியுள்ளது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு முஸ்லிம்களாக மாறிவிட்டனர் என்று பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய மதிப்பீடுகளின்படி, 2010 முதல் 2020 வரையிலான தசாப்தத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வரலாற்று ரீதியாக மிக வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 347 மில்லியன் அதிகரித்து […]
வரும் செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது வயதை நிறைவு செய்யவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், 75 வயதிற்குப் பிறகு தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற “குரு பூர்ணிமா” விழாவில் பேசிய மோகன் பகவத், வயதானவர்கள் வழிகாட்ட வேண்டும்; செயல்படவேண்டிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும். இதுவே […]
உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி “உலக மக்கள் தொகை நாள்” (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை காரணமாக ஏற்படும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்துசிந்திக்கவும், கலந்துரையாடவும் ஒன்று கூடுகின்றனர். இந்தியா, உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், உலக மக்கள் தொகை […]
வடக்கு மெக்சிகோவில் நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவொர்ம் ஈ”(“New World screwworm fly”) எனப்படும் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் மீண்டும் தெற்கு எல்லையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக விலங்குகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான தொற்றை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டுண்ணி அதன் லார்வாக்களுக்கு(புழு) பெயர் பெற்றது, […]
பசுபிக் பெருங்கடலில் 20,000 அடி ஆழத்தில் மர்மமான கருப்பு முட்டை வடிவிலான பொருட்களை கண்டுபிடித்துள்ள சம்பவம் விஞ்ஞான உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவற்றை திறந்தபோது உள்ளே கண்டது தான் மிகவும் ஆச்சரியமும், வியப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அது, இவ்வளவு ஆழத்தில் முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய பல புதிய தரவுகளை அளித்துள்ளது. இது பூமியின் மிக ஆழமான பகுதிகளிலும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வளர்கின்றன என்பதற்கான உறுதியான ஆதாரமாகத் திகழ்கிறது. முட்டைகள் […]
உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு […]
பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் […]
தனது மனைவி ஜ்வாலா கட்டாவுக்கு, ஆமிர் கான் உதவி செய்யாவிட்டால் தனக்கு குழந்தையே கிடைத்திருக்காது என்று விஷ்ணு விஷால் உருக்கமான பேசியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா தம்பதியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் இதில் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இவர்களது குழந்தைக்கு மீரா என்று பெயர் சூட்டினார். இது பெருமளவில் பேசுப்பொருளானது. ஏனென்றால், விஷ்ணு விஷாலும், அமீர்கானும் எப்படி பழக்கம். […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் நாசாவில் பணிபுரியும் 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் […]

