யோகாவின் முக்கியத்துவம், நன்மைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடாப்பட்டு வருகிறது. இந்தியாவில் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கினறனர். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பல்வேறு வகையில் உதவும் என்று சொல்லப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மனநிலை ஆரோக்கியம் உடல்நலனைப் பேண உடற்பயிற்சி மிகவும் அவசியமானதாக ஆகிவிட்டது. பணி சுமை, மனசோர்வு உள்ளிட்டவற்றை நிர்வகிக்க […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, கடந்த ஒரு வாரமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் அதன் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒரு வாரமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவுவதாகவும், ஆனால் எண்ணெய் பற்றாக்குறை இல்லை […]

பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 10% இலிருந்து 15% ஆக உயர்த்தப்படுவதாக கர்நாடக அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, எதிர்க்கட்சியான பாஜக இந்த நடவடிக்கையை “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர்களின் படி, இந்த நடவடிக்கை மக்கள் தொகை நிலவரங்களுக்கும், மற்றும் தற்போதுள்ள மத்திய வழிகாட்டுதல்கள் இரண்டிற்கும் ஒத்துப்போகிறது. இந்த உயர்த்தப்பட்ட ஒதுக்கீடு அனைத்து சிறுபான்மையினருக்கும், அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின்கள் ஆகியோருக்கும் பயனளிக்கும் என்று […]

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எனினும், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘இஸ்ரேலின் இருப்புக்கே’ ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் […]

அமெரிக்காவின் முன்னணி பிராண்டான இன்டெல், அதன் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து அதன் இன்டெல் ஃபவுண்டரி பிரிவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய அளவில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதிக்கலாம். இதுதொடர்பாக இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாகா சந்திரசேகரன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், நிறுவனத்தின் தற்போதைய நிதி […]

பல தசாப்தங்களாக HIVக்கு எதிரான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மிக முக்கியமான முன்னேற்றமாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் (FDA), லெனகாப்பவிர் (Lenacapavir) எனப்படும் புதிய மருந்தை அங்கீகரித்துள்ளது. இந்த மருந்து நீண்ட காலம் செயல்படும் வகையாகும் மற்றும் HIV-யிலிருந்து தெளிவான பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. […]

கடந்த 7 நாட்களாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் கொடியதாக மாறி வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பழிவாங்க ஈரானும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. சமீபத்திய தாக்குதலில், ஈரான் இஸ்ரேலிய பங்குச் சந்தை மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது, அதன் பிறகு இஸ்ரேலிடமிருந்து இன்னும் பெரிய தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கின் இரண்டு பெரிய […]

உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர். அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம். 2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி […]

சர்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ செயல்படுத்துவதற்கான விதிகளை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வரைவு செய்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது என்றும் இந்த விதிகள் 15-20 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 21 முதல் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் அவற்றை வழங்க வழி வகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மையில் பெரும் மாற்றங்களைச் செய்வதை […]

மணிப்பூர் மக்கள் யாருமே அம்மண்ணில் தோன்றியவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில், அண்டை தேசங்களில் இருந்து குடியேறிய மங்கோலிய இனக்கூறு உடைய மக்களே இவர்கள். இவர்களில், ‘மெய்தி’ என்றழைக்கப்படும் பழங்குடிகளே மூத்த குடிகள். அதாவது, முதலில் குடியேறியவர்கள். இவர்களுக்கு பின் குக்கிகள், அடுத்து நாகர்கள் மற்றும் பிற பழங்குடிகள் மணிப்பூருக்கு வந்து, ஆளாளுக்கு ஒரு பிராந்தியத்தில் வாழத் துவங்கினர். பவுத்த கலாசார பாரம்பரியம் உடைய மெய்தியினருடன் ஒப்பிடுகையில், குக்கிகள் முரட்டு குணம் […]