டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவுள்ளார். அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு […]

இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது UPI அதாவது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், UPI ஐ ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக அவர்கள் மாறியுள்ளனர். அதாவது இனிமேல், இங்குள்ள எந்தவொரு பொருளின் பரிவர்த்தனைக்கும் UPI மூலம் பணம் செலுத்தலாம். பீம் ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் […]

இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை […]

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6, 2025) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு இலட்சியம் மட்டுமல்ல, அது நமது பொதுவான நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம் என்று பிரதமர் மோடி கூறினார். “மனிதகுலத்தின் வளர்ச்சி அமைதியான மற்றும் […]

கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 44. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தோனி. கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து […]

பர்மிங்காம் டெஸ்டில் இந்தியாவின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தை இந்திய அணி தோற்கடித்துள்ளது. ஆகாஷின் அபார பந்துவீச்சால், 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி . இந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆகாஷ் […]

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் முடிவுக்கு வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, முதல் குவாலிபையர் போட்டியில் சேப்பாக்கை வீழ்த்திய திருப்பூர் அணி நேரடியாக […]

இந்தியாவின் மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு 2019-21 இன் படி, காற்று மாசுபாடு 13 சதவீத முன்கூட்டிய பிறப்புகளுக்கும், 17 சதவீத குறைந்த எடை பிறப்புகளுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டது, மேலும் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக, […]

டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஹரியானாவில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 1.3 மீட்டர் குறைவாகவும், அபாய அளவான […]

மருத்துவரை காதலித்து திருமணம் செய்த யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டெக்னாலஜி கேட்ஜெட்கள் பற்றி ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். முன்பு டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இயங்கி வந்த சுதர்சன், தற்போது ‘டெக் சூப்பர் ஸ்டார்’ என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுதர்சன் […]