மத்திய காலத்திலிருந்து மறுமலர்ச்சி காலம் வரை, போர் மற்றும் மோதல்கள் தொடர்ச்சியான நிகழ்வாக இருந்து வருகின்றன. சமீபத்தில், இஸ்ரேல் மற்றும் காசா, ரஷ்யா மற்றும் உக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை உலகம் கண்டுள்ளது, மேலும் சீனா மற்றும் தைவானுடனான பதட்டங்கள் கூட பிடிவாதமாக நீடிக்கின்றன. இத்தகைய போர்களும் மோதல்களும் பரவலான அழிவை உருவாக்குகின்றன. அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன, மக்கள் தங்கள் வீடுகளை […]

குஜராத்தில் சட்டவிரோதமாக ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 2,352 பேரில் 741 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக […]

அதிபர் டிரம்பின் வரி கொள்கை சட்டத்தை விமர்சித்து வந்த எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். […]

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸையும் சேர்த்து ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமின், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587, இங்கிலாந்து 407 ரன் […]

ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு […]

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், ரூ.500 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழையால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மலைப்பகுதி முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் (SEOC) கூற்றுப்படி, இந்த உயிரிழப்புகள் ஜூன் 20 முதல் ஜூலை 4, 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தன, கனமழையால் ரூ.541 […]

அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில புளூடூத் ஹெட்ஃபோன்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய செவிப்புலன் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த ஹெட்ஃபோன்களால் அதிக ஆபத்து: CERT வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியின்படி, சோனி, போஸ், மார்ஷல், JBL மற்றும் ஜாப்ரா போன்ற பிரபலமான பிராண்டுகளில் பயன்படுத்தப்படும் ஐரோஹா புளூடூத் சிப்செட்களில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரவு உணவின் போது சோஹாரி என்ற சிறப்பு பாரம்பரிய இலையில் உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோ சுற்றுப்பயணத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) அங்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ​​சோஹாரி என்ற சிறப்பு இலையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும், இந்த […]

பாரத மாதாவை மதச் சின்னம் என்று அழைத்ததற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் […]

ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பேரழிவு நிகழும் என்று புதிய பாபா வங்கா கணித்த ஜூலை 5 இன்றுதான். கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் ‘புதிய பாபா வங்கா’ என அழைக்கப்படுகிறார். மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோபு பூகம்பம், பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற […]