நம் வீட்டைப் பாதுகாக்க கதவைப் பூட்டுவது போல, நம் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சமீபத்தில் 16 பில்லியன் கடவுச்சொற்கள் கசிந்த சம்பவம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பீதி அடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உங்கள் கடவுச்சொல்லின் பாதுகாப்பைக் கண்காணித்து, அது கசிந்தால் உடனடியாக எச்சரிக்கும் ஒரு சிறப்பு கருவி கூகுள் நிறுவனத்திடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. […]

போர்ச்சுகீசிய சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி ப்ரோ லீக் கிளப்பான அல்நஸ்ர் உடன் தனது ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகள் மேலும் நீட்டித்துள்ளார். கடந்த பல வாரங்களாக அவரின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு இதன்மூலம் முடிவு கிடைத்துள்ளது. இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார். வெயிலில் நனைந்த கடற்கரையோரத்தில் ரொனால்டோ நடந்து சென்று “அல்நாசர்ஃபாரெவர்” என்று அறிவிப்பது போன்ற […]

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும். இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் […]

ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாற்றங்களில் தரவரிசையில் முன்னேற்றங்கள், புதிய பயணிகள் முன்பதிவு முறை (PRS) மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வரவிருக்கும் சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்துள்ளார். “டிக்கெட் முறை ஸ்மார்ட்டாகவும், வெளிப்படையாகவும், […]

தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 8 அணிகளில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் கடைசி இடத்திற்கான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற அணிகள் இந்த தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்த […]

இன்றுடன் ஜூன் மாதம் முடிவடைகிறது. நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல், இந்தியா முழுவதும் பல முக்கியமான விதி மாற்றங்கள் அமலுக்கு வரும், இது மக்கள் அத்தியாவசியப் பொருட்களைச் செலவிடும் முறையையும் நிர்வகிக்கும் முறையையும் நேரடியாகப் பாதிக்கும். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரயில் டிக்கெட் விலை உயர்வுகள் முதல் ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணங்கள் வரை இந்த மாற்றங்கள் உள்ளன. என்ன மாறுகிறது, அது உங்கள் நிதி சூழலை எவ்வாறு […]

ஜூலை மாதத்தில் பொது விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் உட்பட பத்து நாட்களுக்கு மேல் வங்கிகள் மூடப்படும். 2025-26 நிதியாண்டிற்கான இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் வங்கி விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்காட்டியின்படி, ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். மேலும் அவை பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடலாம். […]

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்தில் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குற்றப் பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் ஊடுருவ இருப்பதாக கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரையிலான பகுதிகளில் கடலோர காவல் […]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபோகும் மக்கள் மற்றும் விசா மோசடியில் ஈடுபடுவோர் கடுமையாகக் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது அதிகாரப்பூர்வ X பதிவில், நாட்டின் சட்டத்தை மீறும் எவருக்கும் “குறிப்பிடத்தக்க குற்றத் தண்டனைகள்” வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குட்டியேற்றத்திற்கு மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் […]

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவின் சமீபத்திய செனட் வரைவை, உலக பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக […]