உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹோட்டல் தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மேகவெடிப்பால், திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மேல் தளம் சேதமடைந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் . இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தி நிறுவனமான PTI படி, தெஹ்ஸில் பர்கோட்டில் உள்ள பாலிகாட்-சிலாய் […]
அந்த காலகட்டத்தில் இண்டர்நெட் பயன்பாடு பெரியளவில் இல்லாததால் சுச்சியின் நிகழ்ச்சி தான் நாட்டுநடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தது. ரேடியோவில் சுச்சியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த சுசித்ரா, ஒரே வருடத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதுவும் 2004-05 காலகட்டத்திலேயே ரேடியோவில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் சுச்சி. ரேடியோவில் வேலை பார்க்கும் போதே சிம்புவுடன் […]
சமீப காலமாக திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட்டை சேர்ந்த சிலர் போதை மருந்து வழக்கில் சிக்கிய நிலையில், தற்போது கோலிவுட் திரை உலகிலும் போதைப் பொருள் பழக்கமும், போதை மருந்து பார்ட்டியும் அதிகரித்து வருவதாக வெளியாகி உள்ள தகவல், அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், தடை செய்யப்பட்ட கொக்கேன் […]
டிஜிட்டல் தளங்கள் மூலம் குற்றச் செயல்கள் எவ்வளவு அமைதியாகப் பரவுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ரூ.2000-க்காக தம்பதி, ஒரு தம்பதி தங்கள் தனிப்பட்ட உடலுறவுத் தருணங்களை லைவ் வீடியோவில் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் அனைத்தும் அவர்கள் வீடிலிருந்தே நடைபெற்று வந்தது. இன்றைய காலக்கட்டத்தில், சாதாரணமாகத் தெரியும் பலரும் – வேகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையில், ஆபத்தான வழிகளில் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வழிகள் ஒருமுறை […]
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, விண்வெளியில் இந்தியாவின் கொடியை அசைத்ததற்காக அவரைப் பாராட்டினார். அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது. இந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் பெக்கி விட்சன், இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. டி20 தொடரின் முதல் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்து ஷெஃபாலி வர்மாவுடன் இணைந்து 77 ரன்கள் எடுத்தார்.ஷெஃபாலி வர்மா வெறும் 20 ரன்கள் […]
ஜூலை 1, 2025 முதல், இந்தியாவில் பல முக்கியமான நிதி விதிகள் மாறவுள்ளன, இது சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். UPI கட்டணம், PAN கார்டு விண்ணப்பம், தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு, GST ரிட்டர்ன்கள் மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டு போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். இந்த விதிகளை செயல்படுத்துவதன் மூலம் செயல்முறைகளை மிகவும் வெளிப்படையானதாகவும் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பானதாகவும் மாற்ற அரசாங்கமும் நிறுவனங்களும் […]
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சர்வைவர் த்ரில்லரான ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸின் சீசன் 3 வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி […]
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 4:37 மணிக்கு ஏற்பட்டது, மேலும் அதன் மையம் தரையில் இருந்து 105 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. தற்போது வரை உயிர் அல்லது சொத்து இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை, ஆனால் நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் பாதுகாப்பாக […]
ஆப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் இதய துடிப்பு போன்று ஆழமான அதிர்வுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அது கண்டத்தையே துண்டாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதிக்கு அடியில், ஆழமான பகுதியில், இதயத் துடிப்பு போன்ற உருகிய பாறை துடிப்புகளின் அதிர்வுகள் எழுவது புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கான ஆண்டுகளில், இந்த செயல்முறை ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும் என்று […]

