அமெரிக்காவின் முன்னணி பிராண்டான இன்டெல், அதன் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து அதன் இன்டெல் ஃபவுண்டரி பிரிவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய அளவில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதிக்கலாம். இதுதொடர்பாக இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாகா சந்திரசேகரன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், நிறுவனத்தின் தற்போதைய நிதி […]
பல தசாப்தங்களாக HIVக்கு எதிரான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மிக முக்கியமான முன்னேற்றமாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் (FDA), லெனகாப்பவிர் (Lenacapavir) எனப்படும் புதிய மருந்தை அங்கீகரித்துள்ளது. இந்த மருந்து நீண்ட காலம் செயல்படும் வகையாகும் மற்றும் HIV-யிலிருந்து தெளிவான பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. […]
கடந்த 7 நாட்களாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் கொடியதாக மாறி வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பழிவாங்க ஈரானும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. சமீபத்திய தாக்குதலில், ஈரான் இஸ்ரேலிய பங்குச் சந்தை மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது, அதன் பிறகு இஸ்ரேலிடமிருந்து இன்னும் பெரிய தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கின் இரண்டு பெரிய […]
உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர். அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம். 2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி […]
சர்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ செயல்படுத்துவதற்கான விதிகளை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வரைவு செய்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது என்றும் இந்த விதிகள் 15-20 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை 21 முதல் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் அவற்றை வழங்க வழி வகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மையில் பெரும் மாற்றங்களைச் செய்வதை […]
மணிப்பூர் மக்கள் யாருமே அம்மண்ணில் தோன்றியவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில், அண்டை தேசங்களில் இருந்து குடியேறிய மங்கோலிய இனக்கூறு உடைய மக்களே இவர்கள். இவர்களில், ‘மெய்தி’ என்றழைக்கப்படும் பழங்குடிகளே மூத்த குடிகள். அதாவது, முதலில் குடியேறியவர்கள். இவர்களுக்கு பின் குக்கிகள், அடுத்து நாகர்கள் மற்றும் பிற பழங்குடிகள் மணிப்பூருக்கு வந்து, ஆளாளுக்கு ஒரு பிராந்தியத்தில் வாழத் துவங்கினர். பவுத்த கலாசார பாரம்பரியம் உடைய மெய்தியினருடன் ஒப்பிடுகையில், குக்கிகள் முரட்டு குணம் […]
ஈரான் கடந்த ஆண்டில் மட்டும் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் […]
அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் மோசடியாக குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) கடுமையாக்கியுள்ளது . இந்த மோசடி இப்போது முழு அளவிலான தொழிலாக மாறியுள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்காவில் விரைவான நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிரமமற்ற வழியாக திருமண அடிப்படையிலான க்ரீன் கார்டுகள் (Marriage Green Cards) கருதப்படுகின்றன. […]
ஈரானில் சிக்கித் தவித்த 110 இந்திய மாணவர்கள் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளனர். இந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்கள் உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். மாணவர்கள் புதன்கிழமை மாலை ஆர்மீனியா மற்றும் தோஹா வழியாக டெல்லி விமானம் மூலம் வந்தனர். இருப்பினும், அவர்களின் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் […]
ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை […]

