தனது வாழ்க்கையில் தற்கொலை செய்து கொள்ள நினைத்த கடினமான காலகட்டத்தைப் பற்றி சமீபத்திய நேர்காணலில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 இல் திருமணம் செய்து கொண்ட சஹல் – தனஸ்ரீ தம்பதி சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். நீண்ட காலம் தனித்தனியாக வாழ்ந்த பிறகு, இருவரும் சட்டப்பூர்வமாகப் பிரிந்துள்ளனர். இதன் பிறகு, சாஹல் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறப்பட்டது. யுஸ்வேந்திர சாஹல் […]

செயற்கை நுண்ணறிவால் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் வேலைகளின் பட்டியலை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அதில் AI குறிவைக்கும் 40 வேலைகளும், அதன் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கும் 40 வேலைகளும் என்னென்ன என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய அளவிலான பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வேலைகள் அதிக ஆபத்தில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. செயற்கை நுண்ணறிவு, மக்கள் தங்கள் வணிகம் அல்லது தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு வகையான […]

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நர்சரி சேர்க்கைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.2.51,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து தர்மா பார்ட்டி ஆஃப் இந்தியா நிறுவனர் அனுராதா திவாரி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இப்போது, ABCD கற்க மாதத்திற்கு ரூ. 21,000 செலவாகும். இவ்வளவு அபத்தமான அதிக கட்டணத்தை நியாயப்படுத்த இந்த பள்ளிகள் என்ன கற்பிக்கின்றன,” என்று கூறியுள்ளார். பள்ளியின் கட்டணக் கட்டமைப்பின்படி, முன் […]

இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம் என்ற புதிய விதிகளை மெட்டா அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் புதிய DM மற்றும் பிளாக் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது, லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) அம்சத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய குறைந்தபட்சம் 1,000 ஃபாலோயர்களை (followers) கொண்டிருக்க வேண்டும். 1,000 ஃபாலோயர்களுக்கு […]

மார்பகத்திற்கு அருகில் அல்லது ப்ரா பட்டையின் கீழ் தோல் கருமையாகிவிடும் பிரச்சனையால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கோடையில் அல்லது நீண்ட நேரம் இறுக்கமான ப்ரா அணிவதால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இது மார்பக புற்றுநோயின் அறிகுறியா என்ற பயம் மனதில் எழுகிறது. இதுபோன்ற கேள்விகள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வேகமாக தேடப்படுகின்றன, இது பயத்தை மேலும் அதிகரிக்கிறது. ப்ரா தேய்ப்பதால் ஏற்படும் தோல் கருமை உண்மையில் […]

சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 4வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன. 2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் […]

வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று […]

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. 1911 இல் பிறந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்தார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 […]

உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை, கோலாரின் 38 வயது பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு இதய நோயால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது ரத்த வகை, ‘ஓ பாசிட்டிவ்’ என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அப்பெண்ணின் ரத்தத்தை பரிசோதித்த போது, […]