விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித்திடம் […]

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில், ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ […]

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில் புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.  தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் […]

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் […]

திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை […]

உலக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட், தற்போது மீண்டும் பெரும் அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் ஊழியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட்டில் வேலை என்பது பலருக்கும் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நிறுவனத்தில் நடைபெறும் பணிநீக்கங்கள் ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் மைக்ரோசாப்ட் மேற்கொள்கின்ற நான்காவது பெரிய பணிநீக்கம் என்பது கவலையளிக்கும் உண்மை. ஜனவரி 2024ல் கேமிங் பிரிவில் […]

புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட […]

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிப் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் உரிமை காவல்துறைக்கு உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிப் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் […]

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான […]

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளராக பணிப்புரிய தற்போது தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் NGO/விலங்குகளுக்கான பாதுகாப்பு தங்குமிடம் அல்லது விலங்கு பாதுகாப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க […]