உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் காரணமாக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த […]

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், நாட்டில் பல்வேறு நிலைகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், அவசரநிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல்களையும் நடத்துகிறது. தேர்தல்களின் போது, ​​பல இடங்களில், மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலும், வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாமலும் இருந்தால் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும், உத்தரகண்டில் ஒரு […]

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்குவது கூட பாதுகாப்பு இல்லை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தற்போது, SparkKitty எனப்படும் தீம்பொருள், சுமூகமாக இயங்கும் செயலிகள் உருவத்தில் நுழைந்து, பயனர்களின் புகைப்படங்கள், கிரிப்டோ பணப்பைகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது. இந்த செயலிகள் புதிய மற்றும் பிரபலமானவை போல தோன்றும்; ஆனால், அதற்குள்ளே தீம்பொருள் மறைந்திருக்கும். நீங்கள் இந்த செயலிகளை நிறுவும்போது, “புகைப்பட கேலரியை […]

நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் பல வகையான சமையல் குறிப்புகளில் நெய்யைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், வெதுவெதுப்பான நீரில் நேரடியாக நெய்யைக் கலந்து உட்கொள்வதால் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னவென்று இங்கே பார்ப்போம்.    பொதுவாக, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் இரண்டும் தனித்தனியாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், அவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது இரட்டிப்பு நன்மைகளை அளிக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். […]

2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர். […]

தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என […]

நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்காக […]

தனியாக வசிப்போர் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்காக விரைவாக தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாக கருதப்படும் நூடுல்ஸ், தற்போது விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறம் “புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பு ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுவதால், நூடுல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. ‘omggotworms’ என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள […]

தமிழகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஜூலை 1, 2025 முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 30, 2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்: “2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என […]

கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், […]