ரயில் பிரயாணத்தின்போது நீங்கள் முன்பதிவு செய்து காத்திருக்கும் போது ரயில் தாமதமாக வந்தால் அதற்குண்டான பலனை நீங்கள் பெறுவீர்கள். மக்களுக்கு நீண்ட தூர பயணங்களுக்கு உதவியாக இருப்பது, ரயில்கள் தான். பயணிகள் முன்பதிவு செய்து கொள்வதற்கும் , தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்யவும் பல வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பான வாய்ப்பு அளிக்கின்றது. இதனை பற்றி பலருக்கும் தெரியாமல் […]
தென்காசி மாவட்டத்தில் தேவர்ஜெயந்தி விழாவின்போது மின்சாரம் தாக்கி 18வயது இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தின் கோவிந்தாபேரியில் வடக்கு தெருவில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். 18 வயதான முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில்இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார். அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை அப்பகுதி மக்கள் கோலாகலமாக […]
ஆட்சியாளர்களின் கைப்பாவையாக தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’‘ முத்து […]
இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ’காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது. இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரெய்சா வில்சன், திவ்யதர்ஷினி, யோகிபாபு, ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்பட பலர் இப்படித்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகி இருக்க வேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் இப்படம் தள்ளிப்போனது. […]
சேலம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் மாமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை பகுதியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்த அவரது தம்பி, இவர்களின் நண்பர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி 8ம் வகுப்பு படித்து வந்தனர். […]
நாட்டிலேயே மிகப்பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினாவில் வரும் காலத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தலங்களின் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றும் கூட. கடற்கரையை ரசிக்காதவர்கள் சென்னையில் இருக்கவே முடியாது. பல லட்சம் பேர் வருகை தரும் மெரினாவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த […]
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காமராஜர் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சின்னராசு. இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டி வருமானம் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்ராசுவின் மனைவி கலைச்செல்வி இறந்தார். இதையடுத்து சின்னராசு காந்திநகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்ற நளராஜாவின் […]
புதுச்சேரியில் திருமணமானபின்னர் வேலை தேடி சென்ற பட்டதாரி பெண்ணை வேலை வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தரகர் ஒருவர் மோசடி கும்பலுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த27 வயதான இளம்பெண் திருமணமாகி உள்ளது. அவர் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும் செய்வதற்கு தயாராக இருந்தார். அப்போது கம்போடியா நாட்டில் ஒரு வேலை இருப்பதாக தெரியவந்தது. இந்த தகவலை முதலியார்பேட்டை முருகன் என்ற […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’’ நாட்டில் ஒரே மதம் , ஒரே மொழி என்று கொண்டு வருவதற்கான திட்டங்கள் நடைபெறுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. இது பல மொழிகள் பேசக்கூடிய, பல தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒன்றியம். இதை […]
தமிழ்நாட்டில் இன்று 15தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.இதனால் மழையின் […]