சமந்தா நடித்து அடுத்து வெளிவரவுள்ள ’யசோதா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ’வாடகைத் தாய் ’ முறையை கதையாக கொண்டது எனதெரியவந்துள்ளது. சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் ’யசோதா’ திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளிவருகின்றது. தமிழ் , தெலுங்கு , மலையாளம்  உள்பட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி […]

’தாராள பிரபு ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண் நாளை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் , திருமண அறிவிப்புக்கு பின்னர் வாழ்த்தி உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றி , உங்கள் அன்பு இன்னும் தேவை என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் ’ திருமணத்திற்கு பின்னரும் நீங்கள் ரொமாண்டிக் படங்களில் நடிப்பீர்களா? எனும் கேள்விக்கு […]

மாநில கட்சிகளைபா.ஜ. அழிக்கின்றது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை பாஜகவில் இணைப்பதற்காக, அவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக மூன்று பேரை தெலுங்கானா போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், “முனுகோடு இடைத்தேர்தலுக்கு முன்பாக, கேசிஆர் கட்சியின் […]

டெல்லி நடத்தி வரும் அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கைவினைஞர் பயிற்சி திட்டத்தின்கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் டிஜிடி டெல்லியால் நடத்தப்பட்டு வருகிறது.. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்பொழுது, கருத்தியல், பணிமனை கணித அறிவியல் மற்றும் […]

முன்னாள் எம்.பி. சசிகலா டெல்லியில் தங்கி இருந்த வீட்டில் பொருட்களை வெளியே வீசிய அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2014ல் பதவ வகித்த சசிகலா புஷ்பா ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் இவருக்கு எம்.பி. வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பதவிக்காமல் முடிந்த பின்னர் அவர் 2020ல் பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி […]

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ’ஊரில் இருக்கும் நாயி , பேயி ’ சொல்றதுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கடுப்பாக பேசியுள்ள வீடியோ  வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க மைக்கை நீட்டியபோது அவர் கடுப்பானார். என்ன மரத்து மேல குரங்கு […]

சென்னையில் ஒரு பிரபல ஓட்டலில் விநியோகிக்கப்பட்ட உணவில் செத்துக்கிடந்த பூரானை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் பிரபல ஓட்டல் இயங்கி வருகின்றது. இந்த ஓட்டலுக்கு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் பூரான் இருந்தது கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர். இறந்த நிலையில் கிடந்த பூரான் பற்றி ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்த […]

டி.20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 போட்டி நெதர்லாந்து இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து விளையாடி கே.எல். ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா 53 […]

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து மாமனாரிடம் போட்டுக்காட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது . கொடூரமாக நடந்து கொண்ட கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா.  இவரது மகள் சோபிதா குப்தா .  குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தாவை கடந்த […]

தேசிய புலனாய்வு முகமை முதலில் பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மின்சாத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் , மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதன் பின்னர் […]