கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனத்தூர் – வர்தூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் உபசனா . 34 வயதான இவர்தனியார் நிறுவனத்தில் மனித வள துறை மேலாளராக பணி புரிந்து வந்தார். ’ கை நிறைய சம்பாதிக்கும் இவருக்கு என்ன கவலை இருக்க போகின்றது என […]

கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என தனியார் கண் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கும் போது கண்களில் காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. து தீவிர தன்மையானது லோசான எரிச்சலில் இருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்வுகள் பார்வைதிறனை இழக்கச் செய்கின்றன . பட்டாசுகளில் வேதிப்பொருட்கள்நிறைந்துள்ளன. இதனால் தொடர்புகை , தொண்டையிலும் , கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி கண்களில் […]

குவைத்தில் மிகவும் பிரபலமான துபாய் மாளிகையான ஜுமெய்ரோ மாளிகையை வாங்கி உள்ள முகேஷ் அம்பானி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம். குவைத்தில் மிகவும் பிரபலமான மாளிகை என்றால் பாம் ஜுமெய்ரோ மாளிகை இது. பனை மர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு அழகான தீவில் அமைந்துள்ளது இந்த மாளிகை இதனை முகேஷ் அம்பானி சுமார் 180 மில்லியன் டாலர் கொடுத்து இதை வாங்கி உள்ளார். இந்திய மதிப்பில் […]

நடிகை வீட்டிலேயே ஒரு கும்பல் புகுந்து லட்சணக்கணக்கில் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் தான் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கைக்கடிகாரம் , மடிக்கணி என அனைத்துமே விலை உயர்ந்த பொருட்கள் . மொத்தம் ரூ.9.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஸ்டெர்லிங் சாலையில் […]

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் வயது 100ஐ நெருங்கினாலும் இவர் இன்னும் இளமையோடு சுறுசுறுப்போடு செயல்பட்டு வருவது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் மூத்த மார்க்சிஸ்ட் தலைவரும் முன்னோடிகளில் ஒருவருமான கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்தான் 100 ஐ நெருங்குகின்றார். எனவே இவரது பேச்சுத்தான் மாநிலம் முழுக்க பேசப்பட்டு வருகின்றது. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு வயது 99 நடக்கின்றது. இதன் மூலம் 100 ஐ நெருங்கும் […]

ஸ்டாலினுடன் நான் பேசினேன் என நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே செல்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி , நான் முதல்வருடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். நான் அவரை சந்திக்கவே இல்லை. ஒரு வேளை நான் சந்தித்து பேசியதை நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஒரு வேளை நிரூபிக்கத் தவறிவிட்டால் அரசியலை விட்டு எடப்பாடி விலகுவாரா […]

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் மேற்கொண்ட நிலையில் ஆறுமுக சாமி ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 600 பக்கத்திற்கும் மேல் உள்ள […]

ஹரியானா மாநிலத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் துண்டு துண்டாடக நிர்வாணமாக வெட்டப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது அவரது கணவரே சிக்கினார். ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் சவுக் என்ற பகுதி உள்ளது. கடந்த திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த சூட்கேசை கைப்பற்றினர். அதன் உள்ளே நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது. இதைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு காவல்துறையினர் தடயங்கள் சேகரித்து விசாரணை […]

குடிபோதையில் தாயைக் கொன்றுவிட்டு வழக்கில் சாட்சி சொல்ல வந்த சகோதரியையும் , தந்தையையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி(47). இவருடைய மகள் கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். மகன் மூர்த்தி குடிபோதைக்கு அடிமையாக தினமும் தகராறு செய்து வந்துள்ளான். இவரது கணவர் கூலி வேலை செய்து வந்துள்ளார் . போதைக்கு அடிமையான இவர்வழக்கம் போல குடித்துவிட்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் […]

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி , தலைக்கவசம் அணியவில்லை என்றாலோ , விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினாலோ புதிய விதிமுறைப்படி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய மோட்டார் வான சட்டத்தின் படி ஆட்டோ ஓட்டுனர்கள் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தை இயக்க மறுத்தால் அவர்களிடம் ரூ.500 அபராதம் […]