தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் உப அறநிறுவனமான சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ( TNHRCE Recruitment 2025 )வெளியாகியுள்ளது. காலிப்பணியிடம்: எழுத்தர், அலுவலக உதவியாலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: திருக்கோயில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]
கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், சமீபத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் திருமணம் ஆன 36 நாட்களில், 22 வயது இளம்பெண் […]
தாம்பரத்தில் உள்ள நன்மங்கலம் ஏரி பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது என்பதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி, ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மனுவை, அப்பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில், நீர் நிலத்தில் […]
விமானப் பயணம் இப்போது சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால் மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமான நிறுவனத்தின் உள் பிரச்சினை என ஏதேனும் காரணத்தால் விமானம் ரத்து செய்யப்பட்டால், அது பயணிகளை மட்டுமல்ல, விமான நிறுவனத்தின் வருமானத்தையும் பாதிக்கிறது. ஒரு விமானம் ரத்து செய்யப்படும்போது ஒரு விமான நிறுவனம் எவ்வளவு இழப்பை சந்திக்கிறது, எந்த விஷயங்களுக்கு அவர்கள் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது […]
எல்லா காய்கறிகளும் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். சிலர் வெண்டைக்காய் ஒட்டும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதை சாப்பிடுவதை விரும்புவதில்லை. இருப்பினும், இது இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். இது எல்லா பருவங்களிலும் கிடைக்கிறது. வெண்டைக்காயைக் கொண்டு பல்வேறு உணவுகளை செய்யலாம். வெண்டைக்காய் ஒட்டும் தன்மையுடன் இருந்தாலும் மிகவும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் […]
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5976 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 507 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 40 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜனவரி 2025 முதல் புதிய மாறுபாட்டால் 116 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2 பேரும், கேரளாவில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக […]
பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]
273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]
நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புவோர் இரண்டு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். அவை நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP). இவற்றில் எது உண்மையில் அதிக லாபத்தைக் கொடுத்தது என்பதை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் எது அதிக வருமானத்தை அளித்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.. FD என்றால் என்ன? நிலையான வைப்புத்தொகை என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி […]
கேரளாவில் உள்ள தனியார் பெட்ரோலிய நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 300 சில்லறை விற்பனை நிலைய விற்பனையாளர்களின் சங்கமான பெட்ரோலிய வர்த்தகர்கள் நலன் மற்றும் சட்ட சேவை சங்கம், தங்கள் தனியார் கழிப்பறைகளை பொது வசதிகளாக மாற்றுவதற்கான அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் […]

