ராஜஸ்தானில் 8 பேர் கொண்ட கும்பல் 8ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு பாலியல் பலாத்காம் செய்யப்பட்டார். அதை வீடியோவாக எடு்தது வைத்துக் கொண்ட நபர்கள் சிறுமியிடம் பணம்கேட்டுள்ளனர். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் […]
ஆயுதபூஜை , விஜயதசமயை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடப்படுகின்றது. 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்மற்றும் தன்னுடன் இணைந்த பிற பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை 5 […]
சென்னை பழை வண்ணாரப்பேட்டையில் முதல் மனைவியுடன் 2-வது மனைவி தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த கணவன் 2வது மனைவியை கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொலை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாஜகான் (47) . தோல் உடைகள் செய்துத்தரும் டெய்லராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் ஜெபினா என்பவருக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இன்னிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்க்கும் […]
90 ஸ் கிட்ஸ்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வரும் நிலையில் தலைப்புச் செய்திக்குள் கல்யாண பேனரைக் கொண்டு வந்து நண்பர்கள் பரபரப்பாக்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சேமன்விளையில் தனது நண்பரின் பிறந்த நாளுக்காக பேனர் வைத்து கொண்டாட நண்பர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நண்பர்கள் குழு ஒன்றிணைந்து திடீரென கிரியேட்டிவாக யோசித்து தலைப்புச் செய்தியைப் போல் கல்யாண பேனரை தயார் செய்துள்ளனர். ’’90’ஸ் கிட்ஸ் திருமணம் … சேனம்விளை அருகே பரபரப்பு […]
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் சென்னைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பயணம் மேற்கொண்டு வந்தார். கடலூர் வந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து கடலூரில் மாவட்ட மருத்துவ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று தமிழக சுற்றுச்சூழல் , காலநிலை […]
டாரோ ரூட் எனப்படும் சேப்பங்கிழங்கு பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகை காய்கறி ஆகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி மாரடைப்பை தடுக்க உதவும் ஆரோக்கியமான கிழங்கு வகையைச் சார்ந்தது. சில காய்கறிகளை சிலருக்குப் பிடிக்காது. இந்த கிழங்கில் பெரும்பாலும் வறுத்தோ அல்லது புளிக்குழம்போ வைத்து சாப்பிடுவார்கள். சிலருக்கு இந்த கிழங்கின் வழவழப்பான தன்மை பிடிக்காது. இதனால் இந்தக் கிழங்கு வெறுப்பை சம்பாதிக்கின்றது. இருந்தாலும் இதில் எவ்வளவு […]
கொரோனா பெருந்தொற்று உலக மக்கள் அனைவரையும் பெரிய அளவில் ஆட்டிப் படைத்தது.. அதுமட்டுமின்றி நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போட்டது. இதனிடையே சானிடைசர்கள் பயன்படுத்துவதை நாம் பழக்கமாக்கிக் கொண்டோம். இதைப் பயன்படுத்தும்போது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதோடு மூகக் கவசம் அணிதல், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்யும் […]
திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் சம்மதத்துடன் டிக்டாக் பிரபலத்தை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் கணவன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது. திருப்பதி அம்பேத்கார் நகரைச் சேந்தவர் கல்யாண். இவர் சமீபத்தில் காதலித்து விமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் நித்யா என்ற பெண் கல்யாண் வீட்டுக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். முதலில் அமைதி […]
வரும் 1-ம் தேதியில் இருந்து கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளபுதிய விதிகள்அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே இந்தி விதிகள் அமல்படுத்தப்பட இருந்தது ஏப்ரல் மாதம் அமல்படுத்த இருந்த விதிமுறைகள் தாமதமாக வெளியிடப்படுகின்றது. கிரெடிட் கார்டு லிமிட் அனுமதி, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் மற்றும் கார்டை ஆக்டிவேட் செய்ய கார்டு வழங்குநர் ஓடிபி எண்ணை பயனர்களிடம் கேட்பது போன்றவை முக்கிய விதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி கிரெடிட் கார்டுகளை […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த அனுபவம் மிக்க பவுளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார். மீதம் உள்ள […]