இங்கிலாந்தில் ஒரு பெண், டூத் பிரஷ் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கணவன் துரோகம் செய்கிறார் என்று மனைவிகள் சந்தேகம் கொள்வது, அவர் செல்போனில் வரும் சந்தேகமான மெசேஜ்கள் அல்லது நடத்தை மாற்றங்கள் காரணமாக தான். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண், மிகவும் விசித்திரமான முறையில், மின்சார பல் துலக்கும் சாதனத்தின் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். […]

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அவசியம். பூமியில் தண்ணீர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று, அது இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதன் மூலம் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். மக்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆனால் பூமியிலிருந்து நாம் அதிக அளவு தண்ணீரைப் பிரித்தெடுத்துள்ளதால் […]

அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! என மெய்சிலிர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், ஒரு இந்திய பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தென்னிந்தியாவில் மிக பிரபலமான மெதுவடையை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சமைத்து, அருகில் […]

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,360 ஆக இருந்த நிலையில் ஆறு நாள்களில் படிப்படியாக ரூ.1680 வரை உயர்ந்து, ரூ.73,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல, வாரத் தொடக்கத்தில் ரூ.8,920 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், படிப்படியாக ரூ.210 அதிகரித்து இன்று ரூ.9130க்கு விற்பனையானது. இந்த வாரம் முழுக்க […]

உங்களுக்கு இருதய நோய் இருந்தால், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிரமான இதய நோய்களை தடுப்பதற்காக, இரத்தம் கட்டியெடுக்காமல் ஓடச் செய்யும் மருந்துகள் உண்டு. அதில் ஆஸ்பிரின் குறைந்த அளவில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பிரின் என்பது இரத்தப்பிளேட்லெட்டுகள் (platelets) ஒன்றிணைந்து இரத்தக் கட்டிகளை உருவாக்குவதை தடுக்கும் செயல்பாட்டை கொண்டது. இதனால் […]

அதிக எடை பிரச்சனையால் பலர் அவதிப்படுகிறார்கள். எடை குறைக்க, பலர் சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள்.. அல்லது.. ஜிம்மிற்குச் சென்று கடினமாக உழைக்கிறார்கள். ஜிம்மில் எடை தூக்குவதன் மூலமும், கடினமான பயிற்சிகள் செய்வதன் மூலமும் அவர்கள் எடையைக் குறைக்கிறார்கள். இருப்பினும்.. ஒரு இளம் பெண் ஜிம்மிற்குச் செல்லாமல் வீட்டிலேயே 30 கிலோ எடையைக் குறைத்தார். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளால் தான் எடையைக் குறைத்ததாக அவர் கூறினார். ஜிம்மிற்குச் செல்லாமல் எடை குறைப்பது மிகவும் கடினம் […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாகும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமாக விளங்குகிறது. இத்தலத்தில், பாண்டவர்களின் தூதராக கண்ணன் தோன்றிய தருணமே, ஆலயத்தின் முக்கிய தரிசனமாக உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான், விஸ்வரூப தரிசனம் காட்டி காட்சி தருகிறார். நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களாலும் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் […]

புராணங்களின்படி, ஆமை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. ஆமை மோதிரம் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மோதிரங்கள் பொதுவாக வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆனவை. இந்த மோதிரம் வாஸ்து குறைபாடுகள் மற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கி வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணியக்கூடாது. ஆமை மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும்? ஜோதிடத்தின் படி, ஆமை […]

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலம் பிர்னோவில் மாவட்டம்  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி தனது முன்னாள் காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி பிரிஜேஷ் குமார் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் […]