ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தி.மு.க.வில் இணைந்த நிலையில், வைத்திலிங்கமும் அதிமுக அல்லது தி.மு.க.வில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வந்தன. […]
நீண்ட நேர உடலுறவு மற்றும் மேம்பட்ட பாலியல் செயல்திறன் ஆகியவற்றுக்காக பிரபலமாக அறியப்படும் வயாகரா (Viagra) மருந்தை, தற்போது மருத்துவ தேவை இல்லாத இளம் தலைமுறையினரும் பயன்படுத்துவது கவலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு காலத்தில் விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது ‘செயல்திறனை உயர்த்தும்’ அல்லது ‘நம்பிக்கையை அதிகரிக்கும்’ ஒரு பொழுதுபோக்குப் பொருளாகப் பரவலாக மாறி வருகிறது. […]
இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இயங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட இந்த அத்தியாவசியக் கருவியைப் பாதுகாக்க, பலர் பவுச்சுகள் மற்றும் கவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த முயற்சியில் சிலர் அறியாமலேயே ஒரு ஆபத்தான பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதாவது, செல்போன் கவரின் உள்ளே ரூபாய் நோட்டுகள், அடையாள அட்டைகள் அல்லது ஏ.டி.எம். கார்டுகளை வைத்து எடுத்துச் செல்வது. இது […]
ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தொழில் அல்லது வேலையில் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற போதுமான செல்வத்தையும் ஈட்ட கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தும் சில சமயங்களில், எதிர்பார்க்கும் நிதி வளர்ச்சி கிடைக்காமல் போகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை வீட்டில் சீரான நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை பொறுத்தே அமைகின்றன. ஒருவர் தொடர்ந்து பண பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால், அதற்கு வீட்டில் உள்ள சில வாஸ்து குறைபாடுகளே […]
உத்தரப்பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவில் வசித்து வந்த அதன் உரிமையாளர் மொகிந்தர் சிங் மற்றும் அவரது பணியாளர் சுரேந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 19 வருடங்களாக ஏழை குடும்பங்களை சேர்ந்த பல சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களை கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் சிலவற்றை தனியாக வெட்டி, பங்களாவைச் […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி ஷர்மா (33) என்பவருக்கு சிவா என்பவருடன் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையில், பிங்கி ஷர்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவரும் மாமியாரும் வீட்டில் இல்லாத சமயங்களில், இவர் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த […]
திருமணத்திற்கு முன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு, பின்னர் அந்த உறவு முறிந்தால், அதை ‘திருமணம் செய்வதாக ஏமாற்றுதல்’ என்று கூறி கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான ஏமாற்றத்தை குற்றவியல் நடவடிக்கையாக மாற்றுவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என்றும் நீதிபதி புகழேந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கின் பின்னணி என்ன..? திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பட்டதாரிப் பெண், தன்னைத் […]
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான கட்டத்தை அடைந்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீடு வாங்கும்போது, நிதி நிர்வாகத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள், மாதாந்திர தவணைகள் ஓய்வூதியச் சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டியது அவசியம். ஒருவேளை, EMI கட்டுவதற்காக ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது வழக்கமான செலவுகளுக்கு கிரெடிட் […]
நவீன வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்துவதிலும், வீட்டு வேலைகளை எளிதாக்குவதிலும் வாஷிங் மெஷின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நகர்ப்புறங்களில் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃப்ரண்ட்-லோடு (தண்ணீர் மற்றும் மின்சார சிக்கனம்) மற்றும் டாப்-லோடு (பயன்பாட்டு எளிமை) என இரண்டு முக்கிய வகைகளிலும், இன்வெர்ட்டர் தொழில்நுட்பம், வைஃபை இணைப்பு போன்ற நவீன அம்சங்களுடனும் பல பிராண்டுகள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. மென்மையாகத் துணிகளைச் சுத்தம் செய்வது, உடல் […]
பெரும்பாலான வீடுகளில் சீலிங் ஃபேன்கள் அதிகபட்ச வேகத்தில் (வேகம் 5) இயக்கப்படுவது வழக்கம். ஆனால், இவ்வாறு முழு வேகத்தில் இயக்குவது மின்சார கட்டணத்தை அதிகரிக்க செய்யுமா என்ற பொதுவான கேள்வி எழுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக வேகத்தில் இயங்கும்போது, குறைந்த வேகத்துடன் ஒப்பிடுகையில் ஃபேன் சற்று அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்த வித்தியாசம் கடுமையாக இல்லாமல் மிதமானதுதான். மின் நுகர்வில் ரெகுலேட்டரின் பங்கு : ஃபேனின் வேகம் கட்டுப்படுத்தப்படும் […]

