தற்போதைய காலகட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பது தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு நிறுத்தலாம் என்று ஆரம்பிப்பவர்கள், பல மணி நேரங்களைக் கடந்து அதிலேயே மூழ்கிப் போவதைப் பார்க்க முடிகிறது. இந்த அதீதப் பழக்கம், மகிழ்ச்சி தருவது போலத் தோன்றினாலும், நீண்டகாலத்தில் பல ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும், மனநலப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது என்று […]
உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க, இன்று பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி (ஃப்ரிட்ஜ்) ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. குளிர்ச்சியை வெளியிடுவதன் மூலம் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்கள் சில சமயங்களில் சரியாகக் கூலிங் ஆகவில்லை என்று பலர் புகார் கூறுவதுண்டு. இதற்கு ஃப்ரிட்ஜின் பிரச்சனை மட்டுமின்றி, நாமே செய்யும் சில தவறுகளும் காரணமாக இருக்கலாம் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காஸ்கெட்டை […]
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் எரிவாயுக் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் பணி இந்த மையத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை வழக்கம் போல ஊழியர்கள் சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியில் […]
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி, முன் பின் தெரியாதவர்களை நம்பிச் சென்று, மோசடி மற்றும் மிரட்டலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “முதலை வாயில் தலையைக் கொடுப்பது போல” இளைஞர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். இத்தகைய ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த […]
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) ஒரு முக்கிய அளவுகோலாக உள்ளது. இது, ஒரு மாவட்டத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான 2024–25 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் ரங்கா ரெட்டி : தெலங்கானாவின் ரங்கா […]
தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, தனிப்பட்ட தேவைகள், வேலை மற்றும் கல்வி எனப் பலவற்றிற்காக தங்களுக்குப் பிடித்தமான, பொருளாதார நிலைக்கேற்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, ஸ்மார்ட்போன் பயனர்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஐபோன் (iPhone) விலை அதிகம் என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மிக அதிகம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கூடுதல் பணம் செலவழித்து […]
இனிமையான குரலால் பல ஆண்டுகள் இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகை சுலக்ஷனா பண்டிட், மும்பையில் நேற்று (நவ.6) காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர், தனது 71-வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை குடும்பத்தின் வாரிசு : சுலக்ஷனா பண்டிட், மிகச் சிறந்த இசைக் குடும்பப் பின்னணியை கொண்டவர். உலகப் […]
நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தில் பெயிண்டராகப் பணிபுரியும் சுரேஷ் (30) என்பவருக்கும் அவரது மனைவி பாரதிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுரேஷின் மனைவி பாரதி, எதிர்வீட்டைச் சேர்ந்த சுமித்ரா என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பாரதி தனது மார்பில் காதலியின் பெயரான ‘SUMI’ எனப் பச்சைக் குத்தும் அளவிற்கு […]
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, ஆளுங்கட்சியான திமுக தனது பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக தென்மண்டல பொறுப்பாளரான கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் […]

