தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் உருவான ‘மோன்தா’ புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தபோதும், தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவானது. அக்டோபர் மாதத்தில் மட்டும் வடகிழக்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 58% அதிகமாக பதிவாகி இருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் […]
மதுரை – தூத்துக்குடி தேசிய 4 வழிச்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரையில் இருந்து நேற்று மதியம் 2.35 மணியளவில் திருச்செந்தூர் நோக்கி 25 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த குளிர்சாதன அரசுப் பேருந்தானது, மாலை 4.30 மணியளவில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் வந்துள்ளது. பேருந்தை மதுரை பேரையூரைச் சேர்ந்த நல்லுசாமி (45) ஓட்டி வந்துள்ளார். பரமக்குடியைச் சேர்ந்த ஜெயராமன் (47) […]
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் கிரகங்களில் சுக்கிரனுக்கும், செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமிக்கும் உரிய நாளாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதும், விளக்கேற்றுவதும், கோ பூஜை செய்வதும் செல்வச் செழிப்பையும், மன நிம்மதியையும் தரும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இந்தச் சக்தி வாய்ந்த நாள், அன்பையும் அருளையும் ஒருங்கே கொடுக்கும் நாளாகும். பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி […]
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அத்துமீறி நுழைந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய அந்த இளம் பெண், மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் திருமணம் ஆகாமல், பெற்றோர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். மகளின் பாதுகாப்புக்காக, கணவன்-மனைவி இருவரில் […]
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் ஒரு தனியார் விடுதியின் உரிமையாளர் 10 வயது சிறுமியை ஒரு மாதம் முழுவதும் கொடூரமாக தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தங்களது மகளையும் மகனையும் துனி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் விடுதியில் படிக்கச் சேர்த்துள்ளனர். இந்த விடுதியை நடத்திய உரிமையாளர், […]
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலோரப் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கடற்கரைப் பகுதியில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி […]
பகல் முழுவதும் உழைத்தபின், இரவில் குளித்துவிட்டுப் படுக்கைக்குச் செல்லும் பழக்கம் பலரிடம் உண்டு. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு குளியலில் நாம் பயன்படுத்தும் நீரின் வெப்பநிலை மிக முக்கியமானது. குளிர்ந்த நீரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் சிறந்தது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடலில் ஏற்பட்ட அசதி, மனச் சோர்வு ஆகியவற்றைப் போக்கி, ஒரே நொடியில் புத்துணர்ச்சி […]
கேரளா சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையும், ‘ஸ்டார் மேஜிக்’ கேம் ஷோ போட்டியாளருமான ஜஸீலா, தனது முன்னாள் காதலன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நீதி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுவதாக கூறி, தான் கடந்து வந்த சோகமான அனுபவத்தை விளக்கி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜஸீலா தனது பதிவில், “நான் பரிதாபத்திற்காக இந்தப் பதிவை […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 33 வயதுப் பெண், தனது 12 வயது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்குப் பாலக்காட்டைச் சேர்ந்த 36 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]
எந்தவொரு நாட்டின் போக்குவரத்திற்கும் மற்றும் பொருளாதாரத்தின் சுழற்சிக்கும் மிக இன்றியமையாத சக்தியாக எரிபொருள் (பெட்ரோல் மற்றும் டீசல்) விளங்குகிறது. இதன் விலையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகள் குறித்த தரவுகளை இப்போது பார்க்கலாம். இந்த நாடுகள் பெரும்பாலும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதாலோ அல்லது தங்கள் […]

