விவாகரத்து வேண்டும் என்று கேட்ட கோபத்தில், தன் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருடைய தோழிகளுக்கு அனுப்பி அவமானப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர் பெயர் கோவிந்தராஜ் (27) ஆவார். இவர் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார். 23 வயதான அவரது மனைவி, தன்னை பழிவாங்கவே கோவிந்தராஜ் இப்படிச் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். காவல்துறை கூற்றுப்படி, இவர்கள் 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில […]

திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். இந்த சிறப்பான நாளில், தான் விரும்பிய தோற்றத்தில், பொலிவுடன் ஜொலிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது இயல்பு. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், வெறும் 30 நாட்களில் 3 முதல் 4 கிலோ வரை ஆரோக்கியமாகக் குறைக்க உதவும் ஒரு பிரத்யேக உணவு மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டியை இப்போது பார்க்கலாம். வெற்றிகரமான எடை குறைப்புக்கு சில அடிப்படை […]

தூக்கத்தின் ஒரு கட்டத்தில் நிகழும் கனவுகள், நமது எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் கலவையாக ஒரு குறும்படம் போல 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடுகின்றன. கனவுகள் எதனால் ஏற்படுகின்றன என்று தத்துவவியல் மற்றும் மனோவியலின் மூலமாக நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்தாலும், தற்போது மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கனவுகளில் தோன்றும் குறியீடுகளை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவை […]

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]

தென்னிந்தியர்களின் பிரதான உணவாக வெள்ளை அரிசி சாதம் இருந்தாலும், அரிசியை 3 வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளை அரிசியை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் ஏற்படக்கூடிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்குப் பார்க்கலாம். உடல் பருமன் மற்றும் பசி உணர்வு அதிகரிப்பு : வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து மிக அதிகமாக உள்ளது. இதை தினசரி 3 வேளையும் […]

கோவையில் 3 வாலிபர்களால் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 20 வயது கல்லூரி மாணவி வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை சித்ரா சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கோவையைச் சேர்ந்த தனது காதலனுடன் காரில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 வாலிபர்கள், மாணவியின் […]

டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, பின்னர் யூடியூப், பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமான ஜி.பி. முத்து, தற்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள பெருமாள் புரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி, ஜி.பி. முத்துவின் இரு மகன்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்து […]

இந்து மதப் பாரம்பரியத்தில், துளசி செடி மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்பட்டு, பெரும்பாலான வீடுகளில் தினமும் வழிபடப்படுகிறது. எங்கே துளசி தொடர்ந்து வழிபடப்படுகிறதோ, அங்கே லட்சுமி தேவியின் வாசம் நிலைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. துளசியை வழிபடுவதில் சில முக்கிய விதிகள் உள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஜோதிட நிபுணரான மஹந்த் சுவாமி காமேஸ்வரானந்த வேதாந்தாச்சார்யா கூறுகையில், துளசி இலைகளைப் போலவே அதன் பூக்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போயர் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜதுரை (30), கல் குவாரியில் வேலை செய்தபோது ஏற்பட்ட தகாத உறவு, பின்னாளில் பணப் பிரச்சனையாக மாறி, கொலை மிரட்டல் மற்றும் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. மாந்தோப்பு ஒன்றில் ராஜதுரை மீது நடந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (நவம்பர் 4) மாந்தோப்பில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ள […]

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த மாதவன் நாயர் – ரேணுகா மேனன் தம்பதியினர், கடந்த 25 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மாதவன் வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு கிஷோர் என்ற 17 வயது மகன் உள்ளார். ஆனால், 2020-ல் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியால் தொழில் பாதிக்கப்பட்ட மாதவன், வெளிநாட்டில் மேலாளராக பணிபுரியச் சென்றார். மகன் கிஷோரின் படிப்பிற்காக, ரேணுகா மகனுடன் கோட்டயத்தில் உள்ள அடுக்குமாடிக் […]