ஹைதராபாத்தில் உள்ள சப்தகிரி காலனி பகுதியில், மதுபோதைக்கு அடிமையான தனது கணவர் சுரேஷை, அவருடைய மனைவி மௌனிகா, கள்ளக்காதலன் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் (ஓட்டுநர்) – மௌனிகா தம்பதிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், சுரேஷ் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். வன்முறை தாங்க முடியாத மௌனிகா, இரு குழந்தைகளின் செலவுகளுக்காக பாலியல் தொழிலில் […]

டிஜிட்டல் யுகத்தில் அலுவலகப் பணிக்காக ஒரு நாளைக்கு 9 முதல் 12 மணி நேரம் வரை ஊழியர்கள் அமர்ந்திருப்பது வழக்கம் ஆகிவிட்டது. இத்தகைய உட்கார்ந்த வாழ்க்கை முறை, கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்று அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், எம்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில், ”தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, உடல் பருமன், […]

செங்கல்பட்டில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக அரசியல் நிலைப்பாடு மற்றும் விசிகவின் கூட்டணி நிலை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நேரடி எதிர்ப்புக் குரலாக இருப்பது விசிகதான். இங்குள்ள பிரச்சனை விசிகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. இதை சாதியப் பிரச்சனையாகத் திரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்கிற தவறான […]

மத்தியப் பிரதேசத்தின் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சமூக சுகாதார மையத்தில் அரங்கேறிய கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலத்தை, 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து, தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், சடலம் தரையில் […]

நம் பாரம்பரியத்தில் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் கடைபிடிக்கப்பட்டு வந்த எண்ணெய் குளியல் என்னும் ஆரோக்கியப் பழக்கம் இன்று வழக்கொழிந்துவிட்டது. தற்போது அழகு நிலையங்களில் ‘ஹாட் ஆயில் மசாஜ்’ என்ற பெயரில் இது நவீன வடிவம் எடுத்து அதிக செலவில் கிடைக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், உடல் வெப்பத்தைத் தணித்து சமநிலைப்படுத்த இந்த எண்ணெய் குளியல் அவசியமாகிறது. குறிப்பாக, தீபாவளி நாளில் அதிகாலை 4 மணி முதல் 5.30 […]

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகனாக இருந்ததால், நடிகர் விஷால் சினிமாத் துறைக்குள் நுழைவது எளிதாக இருந்தது. ஆரம்பத்தில் இயக்குநர் ஆகும் ஆர்வத்துடன், நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘திமிரு’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்கள் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்களாக வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றதால், தமிழ் திரையுலகில் விஷாலின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. இந்த ஆரம்ப வெற்றியைத் […]

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்த காரணத்தால், சமோசா வியாபாரி ஒருவர் பயணியை மிரட்டி, அவரது ஸ்மார்ட் வாட்சை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன..? அக்டோபர் 17ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஜபல்பூர் ரயில் நிலையத்தின் 5ஆம் நடைமேடையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமோசா வாங்குவதற்காகப் பயணி ஒருவர், தனது ரயிலில் இருந்து கீழே […]

243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக எஞ்சிய 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக அடங்கிய தேசிய […]

நாமக்கல் மண்டலம், தென்னிந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகளில், சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 6 கோடியைத் தாண்டி நிற்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த […]

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பெய்த கனமழையால், வெள்ள நீர் சூழ்ந்து கோழிப்பண்ணை ஒன்று நீரில் மூழ்கியது. இதில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் தேவாரம் – மறவபட்டி சாலையில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று […]