கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]

ஆரோக்கியமாக வாழ விரும்பும் நாம், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்துப் பரப்பப்படும் பல கட்டுக்கதைகளில் சிக்கிவிடுகிறோம். இந்தத் தவறான நம்பிக்கைகள், பல சமயங்களில் நமது ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கே ஆபத்தாக மாறிவிடுகின்றன. உடல் எடைக் குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை, மக்களிடையே நிலவும் 5 முக்கிய கட்டுக்கதைகளையும் அதற்கான உண்மைகளையும் இங்கே பார்க்கலாம். கட்டுக்கதை 1 : கொழுப்புச் சத்துதான் உங்களை எடை அதிகரிக்க செய்கிறது. உண்மை : […]

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்து வரும் அசுர வளர்ச்சி உலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பப் புரட்சி மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் என பலரும் சிலாகிக்கும் நிலையில், அமேசான் நிறுவனர் மற்றும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், AI முதலீடுகள் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இத்தாலியன் டெக் வீக் 2025 மாநாட்டில் பேசிய […]

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையின்போது, கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மின்னல் தாக்கிப் படுகாயமடைந்தனர். கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆத்தூர், ஏரல், முக்காணி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய […]

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த திடீர் இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிழக்கு மாவட்டமான இலாம் […]

நம் பாரம்பரிய மூடநம்பிக்கைகளில், கண் திருஷ்டி என்பது ஒரு நபரின் எதிர்மறை ஆற்றலோ அல்லது பொறாமையோ மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை விவரிக்க பயன்படும் பொதுவான சொல். ஒருவரின் மீது விழும் இந்தத் தீய கண், சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நலக் குறைவு, தொடர்ச்சியான துரதிர்ஷ்டம், விபத்துகள் அல்லது மனச்சோர்வு போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, கண் திருஷ்டியால் பாதிக்கப்படக்கூடிய முதல் 5 ராசிகள் மற்றும் […]

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் தேவாரத் தலத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவேட்களம் ஆகும். இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில், சாஸ்திர விதிகளின்படி மிக சரியாக அமைக்கப்பட்ட பல்லவ மன்னர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் மூலவர் பாசுபதேஸ்வரர் என்றும், தாயார் சத்குணாம்மாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் வரலாறு மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டது. பாரதப் […]

கரூர் மாவட்டத்தில், தாயின் உடல்நலக் குறைவை சரிசெய்யப் பரிகாரம் செய்வதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணின் தாயாருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் சக்திவேல் என்ற சாமியாரை அணுகியுள்ளார். அப்போது அந்த சாமியார், “தாயின் உடல்நலப் பாதிப்பு தீர சில முக்கிய பரிகாரங்கள் செய்ய வேண்டும், […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லையில் வசித்து வந்த யசோதா என்ற திருமணமான பெண், தனது கள்ளக்காதலன் மற்றொரு தோழியுடன் உறவு வைத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யசோதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த உறவு தொடர்ந்த நிலையில், […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம் ஜார்ஜ் (59). இவருக்கும் இவரது மனைவி ஜெசி சாம் (49) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெசியின் சடலம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாம் ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மனைவியைக் கொலை செய்து உடலை வீசிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில், […]