விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி என்பவரின் மகள் பவானி (வயது 17), சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி, வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து வீட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, மாணவி பவானி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையின் […]

மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் தனிச்சிறப்பு. ஆனால், மாம்பழத்தின் பலன்களை அதன் இலைகளில் இருந்தும் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஆம், மாமர இலைகள் ஆரோக்கியம் நிறைந்த அற்புதப் பொக்கிஷம். வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவை இந்த இலைகளில் நிறைந்துள்ளன. சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் இதய ஆரோக்கியம் வரை […]

தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல. அது ஆன்மீக ஆற்றல் கொண்டது என்றும், தீய சக்திகளை விரட்டி, நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில், தங்கம் செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால், இது அதிர்ஷ்டம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீடாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், தங்க நகைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களைக் கொடுப்பதில்லை. சிலர் அதிர்ஷ்டத்தைப் பெறலாம், சிலருக்குச் சில சிக்கல்கள் […]

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று ‘அதி கனமழை’க்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் […]

சென்னையை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வள்ளலார் நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (43). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே இருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் பிரகாஷுக்கு வலது மற்றும் இடது கை மணிக்கட்டுகள், பின்பக்க கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு […]

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் சியோஹாரா பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல், கொலைத் திட்டம் வரை சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மொராதாபாத் நகரில் வாடகைக்கு எடுத்து ஒரு கடை நடத்தி வருவதால், மாதம் ஓரிரு முறை மட்டுமே அவர் […]

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது. முன்பு, […]

புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய வேகத்திலேயே அது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால், சில மாதங்களிலேயே போனின் வேகம் குறையத் தொடங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம், போனில் குவியும் தேவையற்ற தரவுகளும் (Clutter), பின்னணியில் இயங்கும் செயலிகளுமே (Background Apps) ஆகும். உங்கள் போனைப் புதிதாக வாங்கிய வேகத்துக்கு மீண்டும் கொண்டு வர சில எளிய பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். கேட்ச் (Cache) கோப்புகளை நீக்குங்கள் […]

தெலங்கானா மாநிலம் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தில் ஜாதி ஆணவத்தின் உச்சகட்டமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தியநாராயணா என்பவரின் 2-வது மகன் சேகர். இவர், கடந்த ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரவாணி (21) என்ற இளம் பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சத்தியநாராயணா குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சேகரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதால், […]