தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார், திரையுலகில் தனது தனி சிறப்பான இடத்தை வைத்திருந்தாலும், தனது நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் சாதனைகளை படைத்து வருகிறார். நடிப்புக்கு தற்காலிகமாக ஓய்வளித்து, தனது முழு கவனத்தையும் பந்தய உலகிற்குத் திருப்பியுள்ள அஜித், தற்போது சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திரையுலகில் அவர் நுழைந்த காலம் முதலே, அஜித்குமாருக்கு ரேசிங் மீது அலாதியான ஆர்வம் உண்டு. […]
பான் கார்டு என்பது இந்தியாவில் நிதி மற்றும் வரி தொடர்பான அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாத ஓர் அடையாள அட்டையாகும். வெறும் அடையாள ஆவணம் மட்டுமின்றி, வங்கிச் சேவைகள், வருமான வரி தாக்கல், பங்குகள் வாங்குதல், கடன் பெறுதல் போன்ற பல விஷயங்களுக்கு இந்த 10 இலக்க எண் அட்டை அவசியம் தேவைப்படுகிறது. பான் கார்டில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய விவரங்கள் இருக்கும் என்பதால், […]
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் தான், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளின் முழு கல்விச் செலவையும் எஸ்.ஆர்.எம். (SRM) கல்விக் குழுமம் ஏற்றுக் கொள்வதாக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வின்போது […]
தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், நாம் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகமாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் மீது தூசு, அழுக்கு மற்றும் தேய்மானம் காரணமாக பளபளப்பை இழப்பது இயல்பு. நகைகள் மங்கிப் போகும் போது கடைக்குச் செல்லாமல், நமது சமையலறை மற்றும் குளியலறையில் இருக்கும் சில எளிய பொருட்களைப் பயன்படுத்தியே, உங்கள் பழைய நகைகளை […]
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர், தாத்தா பாட்டியுடன் தங்கிப் படித்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளனர். மேலும், லாட்ஜில் ரூம் போட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மது போதையில் மயங்கி விழுந்த மாணவி இந்நிலையில், சம்பவம் நடந்த முந்தைய […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த 35 வயதான சதீஸ்குமார், அதே பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சதீஸ்குமாருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருடைய மகளும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். இந்நிலையில், சதீஸ்குமார் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகளைப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவரது […]
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் […]
இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் கை மற்றும் கால்களில் கயிறு கட்டுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, தீய திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து காக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகவும் நம்பப்படுகிறது. பல வண்ணக் கயிறுகள் இருந்தாலும், அதிக அளவில் கருப்பு மற்றும் சிவப்பு நிறக் கயிறுகளே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சிலருக்குக் கருப்பு நிறம் பொருந்தாது என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், ஜோதிட […]
மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப்.3ஆம் தேதி நடத்திய 56-வது கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதால், கடந்த 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த மாற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை அவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன. இந்த விலை குறைப்பின் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் […]
இன்றைய நவீன உலகில், கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகளை போலவே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. இந்நிலையில், உங்கள் கிரெடிட் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டுவிட்டால் பயப்படாமல் உடனடியாக செய்ய வேண்டிய 6 முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். உடனடி புகார் : உங்கள் கார்டு தொலைந்ததை அறிந்தவுடன் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை […]

