நமது அன்றாட வாழ்க்கையில் வாகனப் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், பெட்ரோல் பம்ப் வணிகம் என்பது எப்போதும் லாபகரமான மற்றும் நிலையான ஒரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. நீங்களும் ஒரு பங்கை பெற விரும்பினால், ஒரு எரிபொருள் நிலையத்தை தொடங்குவதற்கான முக்கியமான வழிமுறைகளையும், கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இப்போது பார்க்கலாம். சரியான இடம் மற்றும் உரிமம் பெறுதல் : ஒரு பெட்ரோல் பம்ப் தொடங்குவதற்கு மிக முக்கியமான முதல் படி, சரியான […]
உடல் ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவுப் பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சியும் அவசியம். குறிப்பாக, அதிகாலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சில ஆரோக்கிய பானங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த உதவுகின்றன. அப்படிப்பட்ட பானங்களில், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள சீரகம், ஓமம், மற்றும் சோம்பு ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். செரிமானம் முதல் […]
அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் […]
இந்திய பண்பாட்டில், பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. தாலி அணிவது எப்படி புனிதமாக பார்க்கப்படுகிறதோ, அதேபோன்ற முக்கியத்துவம் மெட்டிக்கும் உண்டு. மேலும், மெட்டியை தங்கத்தில் அணியாமல், வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும் என்பதற்கான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் ஆழமானவை. ஜோதிட சாஸ்திரத்தின்படி, கால் விரலில் மெட்டி அணிவது ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, […]
சொந்த வீடு என்ற கனவு பலருக்கும் நிறைவேறாத ஆசையாகவே நீடிக்கிறது. இந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என்று விரும்புபவர்கள், முருகப்பெருமானை நம்பிக்கையுடன் வழிபடுவது சிறந்த பலனை அளிக்கும். முருகனின் அருளால் நிச்சயம் சொந்த வீடு அமையும் என்று நம்பப்படுகிறது. முருகன் பரிகாரம் : சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். கூட்டம் குறைவாக உள்ள ஒரு […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வாசுதேவன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. இவர் தெரிந்தவர்களுக்கு மட்டும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார். அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு கொடுத்திருந்தார். ஆனால், சம்பத் பணத்தை திரும்பக் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த நிலையில், காலதாமதமாக சிறுக சிறுக அசல் தொகையை மட்டும் முழுமையாக கட்டி முடித்துள்ளார். அசல் தொகையைப் பெற்ற […]
பீகார் மாநிலத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலை தொடர்வதற்காக, தனது கணவனான மருத்துவரை அவரது மனைவியே கழுத்தறுத்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முராரி என்ற மருத்துவருக்கு திருமணமாகி, குமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், மருத்துவர் முராரியின் உடல், அப்பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், சோழர் நாடு ஊராட்சிப் பகுதியில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் பள்ளிக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55). விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், செல்வராஜின் வீட்டுக்கு இவர்களது உறவினர் காசி துரைசாமி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, துரைசாமிக்கும் செல்வராஜின் […]
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரசியல் மற்றும் சமூக விமர்சகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, உயிரிழப்புகள் குறித்த தகவல் தெரிந்தும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் அவசரமாக சென்னைக்கு திரும்பியது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். “மக்களின் சாவு உன் கண்ணுக்கு […]
தமிழ்நாட்டில் வேளாண் பட்டதாரிகளை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடனும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்துச் சேவைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசு “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வெளியேறும் சுமார் 4,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் 600 பட்டயதாரர்களின் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தி, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் முக்கிய இலக்காகும். இதன் கீழ், மாநிலம் முழுவதும் […]

