வங்கிக் கணக்கு முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வரை, அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான கட்டணங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.100-ஆகவும், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.125-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதார் […]

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு வயிற்று தொடர்பான […]

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே சாக்கடையில், அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ஆண் சடலம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சடலத்தை போலீசார் மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்டது மதுக்கரை, சீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பாலுசாமி என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பாலுசாமி, வீடு திரும்பாததால் […]

உலகம் முழுவதும் மல்யுத்தப் போட்டிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்கப்படுகிறது. WWE என்ற உலகளாவிய மல்யுத்த நிறுவனம், திங்கட்கிழமைகளில் WWE RAW மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் WWE SmackDown என வாரந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் பிரபலமான மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ். 90-களில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய […]

தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 28 வயது பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தின் பின்னணி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கோமதி என்பதும், அவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவருக்கும் தருமபுரி டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) […]

கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் எழும் ஒரு பொதுவான கேள்வி, தினமும் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை கழுவ வேண்டுமா..? அல்லது வாரத்திற்கு ஒருமுறை போதுமா..? என்பதுதான். இதற்கான பதில், உங்கள் தலைமுடி வகை, சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பொறுத்தது. இரண்டின் நன்மைகள், தீமைகள் மற்றும் யாருக்கு எது பொருந்தும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். தினசரி ஷாம்பு போடுவதால் என்ன ஆகும்..? தினமும் தலைமுடியைக் கழுவுவது, மாசு நிறைந்த […]

பண்டிகை காலம் வந்தாலே செலவுகளும் அதிகரிக்கும். இந்தச் சூழலில், பலர் கடன்களை நாடி செல்கின்றனர். ஆனால், எந்த கடன் மலிவானது, எது அதிக சுமையை கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தகவலின்படி, மக்கள் தற்போது பாதுகாப்பான கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதற்கு தங்க அடமானக் கடன், மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் ஆகியவை சிறந்த உதாரணங்கள். அதேசமயம், தனிநபர் கடன் மற்றும் […]

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, இது குறித்த தனது இறுதி அறிக்கையை வரும் செப்.30-ஆம் தேதி அரசுக்குச் சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாறு […]

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்கும். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து வருகிறார். வரும் செப்.27-ஆம் தேதி, சூரியனின் பார்வை சனியின் மீது விழுவதால், சனி பகவான் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்க இருக்கிறார். இதன் […]

கடந்த 2011இல் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி அந்தப் புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டன் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், நான் 3 முறை கர்ப்பமானேன். மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, ஒவ்வொரு முறையும் கருக்கலைப்பு செய்ய மணிகண்டன் வற்புறுத்தினார். ஆனால், திருமணம் செய்யாமல் […]