தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தஞ்சாவூரின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். பட்டுக்கோட்டையில் சுற்றுப் பயணத்தின் பொது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அதிமுக உங்கள் […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக […]

மோட்டார் வாகனத் துறையின் எம்-பரிவஹான் (mParivahan app) செயலியின் பெயரில் சைபர் மோசடியால் பலரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சைபர் மோசடிமூலம் பலர் பணத்தை இழந்துள்ளனர். சைபர் மோசடி குறித்து காவல்துறை மோட்டார் வாகனத் துறை மற்றும் சைபர் பிரிவு, பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளன. இந்த மோசடியில் பணத்தை இழந்த பெரும்பாலானோர் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த சைபர் மோசடியால் […]

சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை […]

பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது அலங்கார பகுதி சாய்ந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னை அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லையம்மாள் கோவில் உள்ளது. இங்கு காலம் காலமாக ஆணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி வெகு விமர்சையாக திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அபிஷேகம் […]

திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான புகாரில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த நிகழ்வு, தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், வழக்கின் தன்மை மற்றும் பரபரப்பைக் கருத்தில் கொண்டு, இது சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற […]

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அருள், சமீபத்தில் ஒரு பேட்டியில், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். “கட்சியில் ராமதாஸ் இருக்கும்வரை தலைவராக அவரே தொடர்வார், அதன் பிறகுதான் அன்புமணி பதவி […]

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 37 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு வாசல் கதவு திறக்கப்பட உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு வாசல் கதவு இம்முறை திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் 300 கோடி […]