சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துநடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் வரவில்லை என […]
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை பான் கார்டுடன் இணைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் […]
அடுத்த ஆண்டு மார்ச் நடைபெறவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தகுதியான தனித்தேர்வர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என […]
சீனாவில் தற்போது வேகமெடுத்து வரும் கோவிட் BF.7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில், குஜராத் மற்றும் ஒடிசாவில் கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேச நாவடட்டம் ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியில் வசிக்கும் இந்த 40 வயது நபர், டிசம்பர் 23 அன்று சீனாவில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் அறிக்கையில், சீனாவில் இருந்து வந்த நபருக்கு […]
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த […]
நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று நியமித்தார். நேபாள அரசியலமைப்பின் 76வது பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறக்கூடிய பிரதிநிதிகள் சபையின் எந்தவொரு உறுப்பினரையும், பிரதமர் பதவிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பித்யா தேவி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் […]
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருந்தனர். அப்போது அங்கு இருந்த இரண்டு பேர் மீது சந்தேக ஏற்பட்டதை அடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பதை கண்டு அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார். இருவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட இவர்கள் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் […]
தருமபுரி அருகே உள்ள பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25) என்பவர் சம்பா கடையில் வேலை செய்து வந்தார். 17 வயதுடைய பெண்ணை காதலித்து வந்த சத்ரியன் கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் தாயார்,தனது மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர், சத்ரியனை போஸ்கோ சட்டத்தின் கீழ் […]
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை […]
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர மணி(21) இவர் டிராக்டர் ஓட்டுநர், இவர் மடிகம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது, பொது இடத்தில் வைத்து காதலிக்குமாறு மணி தாக்கியதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் வேப்பங்குப்பம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, புகாரின் அடிப்படையில் மணியை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. […]