தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக நொடியில் நிகழும் மரணம் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும், விழாக்களில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது என பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் டிசம்பர் 14 இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் 4,5 பெண்கள் மேடையில் நடனமாடுகின்றனர். அப்போது நடனமாடும் 60 வயது […]

ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மீண்டும் மாற்றப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ம் தேதியும், டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் […]

சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ‘சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல, போலி இணையதளம் ஒன்றை cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் உருவாக்கி உள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் […]

‘நாட்டில் விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய-மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பரில் 1,487 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு […]

நாடு முழுவதுமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகளும், தொழிலாளர்கள் தொடர்பான 1667 வழக்குகளும், 487 தேர்தல் வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகளும், 1295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் 69,781 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 53,51,284 வழக்குகளும், மாவட்ட […]

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்சாமியை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர். அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு […]

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் ஆதார் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது, இதற்காகவே தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் […]

இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஒலியை விட வேகமாக சென்று எதிரிகளை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. 5,000 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை கூட நிலப்பரப்பில் இருந்தே துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணையான “அக்னி-5” சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் […]

தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர் தான் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த். இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து […]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரனின் .இளைய மகன் வினோத்குமார், இவருக்கு வயது 21 ஆகும். மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை வினோத்குமார் கல்லூரிக்கு செல்லவில்லை. அவருடன் தங்கி இருந்த மாணவர் ஒருவர், மதியம் விடுதி அறைக்கு வந்தபோது வினோத்குமாரின் அறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. […]