தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது.2018 பிப்ரவரி 5 ஆம் தேதி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 2018, மே 22 ஆம் தேதி 100-வது நாளை எட்டியதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக வந்தவர்கள் மீது […]

கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம், தனது வாகனப் போக்குவரத்திற்காக அமல்படுத்தப்பட்ட ‘ஜீரோ ட்ராஃபிக்’ நெறிமுறையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பதிவிட்டிருந்த முதல்வர் சித்தராமையா, தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வாகனப் போக்குவரத்துக்கான ‘ஜீரோ டிராஃபிக்’ நெறிமுறையை திரும்பப் பெறுமாறு பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டேன். ‘ஜீரோ டிராஃபிக்’ காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள பாதையில் பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் […]

தெலுங்கு திரையுலகின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்கள் ராஜ் மற்றும் கோட்டி-யில் இப்போது ராஜ் இல்லை. மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இசையமைப்பாளர் ராஜ்(68) காலமானார். ராஜின் இயற்பெயர் தோட்டகுரு சோமராஜு. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். சினிமா இசை உலகில் ராஜ்-கோட்டி ஜோடியின் அடையாளம் பற்றி அறிமுகம் தேவையில்லை. இவர்களின் கூட்டணியில் பல வெற்றிப் பாடல்கள் வெளிவந்துள்ளன. அவர்களின் இசை பல தசாப்தங்களாக […]

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் புல்லிபட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் […]

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ். ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், சைப் அலி கான் ராவணனுக்கும் நடித்துள்ளனர். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆதிபுருஷ் படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது., இதனை […]

ஆஸ்திரேலியாவின் 31வது டெஸ்ட் கேப்டனான பிரையன் பூத் தனது 89வது வயதில் இன்று காலமானார். பிரையன் பூத் ஐந்து டெஸ்ட்களில் சதங்களை அடித்துள்ளார். 1960-களின் முற்பகுதி முழுவதும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக இருந்தார் பிரையன் பூத். மிடில்-ஆர்டர் பேட்டரான பூத், 1962 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்தார். இவர் 1,773 டெஸ்ட் ரன்களை எடுத்தார். மேலும் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஹாக்கியிலும் ஆஸ்திரேலியாவைப் […]

தமிழ் திரையுலகின் பிரபலமான பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார். இவருக்கு வயது 82 ஆகும். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை வசந்தா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். 1944-ஆம் ஆண்டு பிறந்த இவர், முதலில் நாடகத்தின் மீது கொண்ட […]

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30, வரை, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் […]

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏடிஜிபி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபியாக இருந்த அருண் ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம். ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு […]

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு உலகளவில் மிகவும் பிரபலமானவர் ஜூனியர் என்டிஆர். இவரின் அடுத்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் சிவா கொரட்டாலா இயக்கிவரும் இந்த படம், பான்-இந்திய படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. தற்காலிகமாக என்.டி.ஆர் 30 பெயரடிப்பட்டுள்ள இந்த படத்திற்க்கு “தேவாரா”என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று என்டிஆரின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, டைட்டிலுடன் பயங்கரமான ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கருப்பு உடையில் ஒரு மூர்க்கமான […]