இந்தியாவில் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி ஆறிவிக்கப்படும் நிலை உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானெர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இது குறித்து பதிவில், “நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர […]

தென் கொரியாவில், ஹூண்டாய் மோட்டார் மற்றும் அதன் சகோதர நிறுவனமான கியா கார்ப் ஆகியவை சார்ஜிங் சிஸ்டங்களில் மென்பொருளில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுமார் 1,70,000 மின்சார வாகனங்களை (EV) திரும்பப் பெறுகின்றன. இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கைகள் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும். இது குறித்து பல புகார்கள் எழுந்த நிலையில், தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் இதனை எதிரொலித்தது. அதன்பிறகு ஆட்டோமொபைல் நிறுவனங்களால் இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கை […]

ஒரே நாடு ஒரே தேர்தலை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தி முடிக்கலாம் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த அளித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு, 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் முதல் கட்டமாக நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் (10 நாட்கள் இடைவெளியில்) தேர்தல் நடத்தலாம் […]

கோபி மஞ்சூரியன் 1975ல் அறிமுகமாகி நாடு முழுவதும் பலரது விருப்ப உணவுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. வேகவைத்த காலிஃபிளவரை சோளமாவு மற்றும் அரிசிமாவில் கலந்து, எண்ணெயில் மொறுமொறுவென வறுத்து, ஒரு கிரேவி போன்று பரிமாறப்படும் கோபி மஞ்சூரியனுக்கு ரசிகர்கள் ஏராளம் இந்நிலையில் கோபி மஞ்சூரியில் சேர்க்கப்படும் மசாலாக்களும், செயற்கை நிறங்களும் உயிருக்கு ஆபத்தானவை என புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து நடந்த ஆய்வில் சோப்புக்கொட்டை பொடி பயன்படுத்தப்படுவதாகவும், தரமற்ற சாஸ் வகைகளை […]

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு மகாராஷ்டிர மாநிலம் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 89 வயதான பிரதீபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை இந்தியாவின் மதிப்பிற்குரிய ஜனாதிபதி பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாறு படைத்தவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து நேற்று புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது […]

2024ல் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் CAA ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் என்றும் CAA திரும்பப் பெறப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ச்சியாக இரண்டாவது முறை பொறுப்பேற்ற, முதல் ஆண்டான டிசம்பர் 2019-ல் CAA மசோதா பாராளுமன்றத் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியதை […]

தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை […]

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகா வளம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தன்னுடைய திரைப்பட விழாக்களில், அரசியல் குறித்து அதிகம் பேசி வந்த விஜய்.. கடந்த இரண்டு வருடமாக அரசியலில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக தன்னுடைய கட்சியின் பெயரை, தமிழக வெற்றி கழகம் என தேர்தல் ஆணையத்தில் புஸ்ஸி ஆனந்த் மூலம் […]

தமிழக அரசின் 2024 ஆண்டுக்கான அவ்வையார் விருது எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசின் 2024 ஆண்டுக்கான அவ்வையார் விருது எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் மார்ச் 7ஆம் தேதி வெளியிட்ட […]

special busses: இன்று மஹா சிவராத்திரி, நாளை மற்றும் நாளை மறுநாள், சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை என்பதால், போக்குவரத்து கழகம் தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, நேற்றைய தினம்(மார்ச் 7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய […]