கேரளாவில் பரவிய பறவைக்காய்ச்சல் – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் அழிப்பு

கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 5,000 வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுவன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் அல்லது கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது கோழி அல்லது பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் அவை பரவுகின்றன. ஆகவே இந்த பாதிக்கப்பட்ட கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்வதும் நோயை ஏற்படுத்தும். 

bird flu 571 855

இந்நிலையில் கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சில கிராமங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 5000 கோழிகள், வாத்துகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து பதப்படுத்தப்பட்ட கோழிகளை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

KOKILA

Next Post

இனிக்க இனிக்க பேச்சு..!! 19 பெண்கள்..!! 80 சவரன் நகை..!! சிட்டாய் பறந்த பரமக்குடி கார்த்திக்..!!

Sun Dec 25 , 2022
19 பெண்களை ஏமாற்றி சுமார் 80 சவரன் வரை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வல்லம்பட்டியைச் சேர்ந்த ஜான்சி ராணி என்ற பெண் தனது கணவர் இறந்துவிட்டதைத் தொடர்ந்து மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அப்போது, ஜான்சி ராணியுடன் அறிமுகமானவர் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா. இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவும், […]
Love

You May Like