பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் 28ஆம் தேதி இரவு 11 15 மணி அளவில் சென்னை சென்ட்ரல் முதல் திருநெல்வேலி வரையிலும் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது.