பக்ரீத் பண்டிகை…..! சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே முழு விவரம் உள்ளே……!

பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.


அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவே பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் 28ஆம் தேதி இரவு 11 15 மணி அளவில் சென்னை சென்ட்ரல் முதல் திருநெல்வேலி வரையிலும் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது.

Next Post

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு பில்…..! விரைவில் வருகிறது புதிய சிஸ்டம்…..!

Tue Jun 27 , 2023
மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வாங்க கூடாது அப்படி வாங்கினால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கினால் பில் வழங்கும் விதத்தில் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக […]

You May Like