திருப்பதி மலைப்பாதையில் வரும் 5-ம் தேதி வரை இதற்கு தடை… வெளியான முக்கிய அறிவிப்பு…

திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இந்நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை மறுநாள் இரவு நடைபெறுகிறது. கருட சேவையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும்வகையில் நாளை முதல் அக்டோபர் 5 வரை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

RUPA

Next Post

துபாயில் இருந்து எவ்வளவு தங்கத்தை எடுத்து வர முடியும்..? என்னென்ன கட்டுப்பாடுகள்.. முழு விவரம் இதோ...

Fri Sep 30 , 2022
என்ன தான் நம் நாட்டிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும், வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் மட்டும் இன்னும் மக்களிடம் குறைந்தபாடில்லை.. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.. தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு காரணங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.. அதுவும் துபாய் நாட்டில் தங்கம் வாங்குவதற்கே அதிகமானோர் விரும்புவதாக கூறப்படுகிறது.. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் […]
சிறந்த முதலீடு..!! தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடக்கம்..!! எவ்வளவு விலை, எப்படி வாங்கலாம்..?

You May Like