ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து இயக்குநர் வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற முன்னணி நடிகர்கள் கூட சில்க் ஸ்மிதாவின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. கவர்ச்சியை உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவின் தனி ஸ்டைல். தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார்.
சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க வேண்டும் என்று தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி நடிகர்கள் தவம் இருந்தார்கள். அதுமட்டுமின்றி அவர் பாதி சாப்பிட்டுவிட்டு வைத்த ஆப்பிளை கைப்பற்ற பெரிய போர்க்களமே நடந்ததாகவும்; மறைந்த பிரதமர் இந்திராகாந்திகூட யார் அந்த சில்க் ஸ்மிதா என்று கேட்டதாகவும் தகவல்கள் உண்டு. இந்தச் சூழலில் ஒரு ஷூட்டிங்கின்போது சில்க்கிற்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
அதாவது இயக்குநர் வீ.சேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சில்க் ஸ்மிதா கமிட்டாகியிருக்கிறார். பட ஷூட்டிங் ஒரு கிராமத்தில் நடந்தது. சில்க்கை ஒரு வீட்டில் தங்க வைத்தார்களாம். அடுத்த நாள் அந்த ஊரில் இருக்கும் பண்ணையார்கள் எல்லாம் சேகரை பார்க்க வந்தார்களாம். வந்தவர்கள், எவ்வளவு ஆகும் என்று கேட்டார்களாம். சேகரோ, சரி படம் தயாரிக்கத்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து மேற்படி விஷயங்களை பேச ஆரம்பித்தாராம்.
ஆனால் அவர்களோ அதெல்லாம் இல்லை சார் சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு நாளைக்கு என்ன விலை என்று கேட்டார்களாம். அதிர்ச்சியடைந்த சேகர், சில்க் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்லி அனுப்பிவைத்தாராம். இதனை வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
Read more: பேர கேட்டாலே நாவில் எச்சில் ஊறும்.. தினமும் புளி சாறு குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?