தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஆம்.ஆத்மியிடம் பேரம்… கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

குஜராத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஆம் ஆத்மி கட்சியிடம் பேரம் பேசியதாக பா.ஜ.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆம். ஆத்.மி. பா.ஜ.க.விடையே தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆம்.ஆத்மி கட்சி பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளது.


குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் இதை செய்தால் டெல்லி அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோரை வழக்குகளில் இருந்து விடுவித்துவிடுவதாகவும் பா.ஜ.க. பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் பா.ஜ.க. மீது கூறியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளத. டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ள தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 8ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் வெற்றி விவரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Post

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் இந்த அமைச்சரின் மகனா?

Sat Nov 5 , 2022
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசோக் சிகாமணி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் பொன்முடியின் மகனாவார். இதனால் போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தன் பெயலாளராக ஆர்.ஐ.பழனி, பொருளாளராக சீனிவாச ராவ் துணை செயலாளராக பாபா ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். […]
ponmudi son 1569656839

You May Like